உன்னருகில் நானிருந்தும்
என்னை அணைக்காமல்,
தலையணையை அணைத்து
நித்திரையில் நீந்திய
உன் முதுகினில் படர்ந்து,
கேசத்தைக் கலைத்து,
தாடையின் ரோமத்தில்
என் கன்னம் உரசி,
கன்னத்தில் முத்தமிட்டு
உன் உறக்கத்தினை
கெடுத்தேன் என்பதற்காக,
இப்படியாடா செய்வது
என் காதுமடல் கடித்து
என்னுள் உள்ள என்னை
உசுப்பிவிட்டு - நீ மட்டும்
தூங்கச் செல்கிறாய்...
No comments:
Post a Comment