Thursday 11 November, 2010

காதல் வாழ்க்கையே போதுமென்பேன்

உன் கொஞ்சல் பேச்சுகளை
எண்ணியே கரைந்து போய்விடும்
பெரும்பாலான தனிமைப் பொழுதுகள்...

என் தோளில் சாய்ந்தபடியே
எண்ணிப் பார்க்க மறந்துபோன
நிமிடங்களை தின்று தீர்த்த பேச்சுகள்...

சில்மீஷப் பார்வை தீண்டல்கள்...
எல்லை மீரா காதல் களியாட்டங்கள்...

எண்ணிக்கையில் தொடங்கிடச் செய்து
எண்ணம் தடுத்திடும் வரையிலான
காதல் முத்தங்கள்...

அர்த்தமற்ற கோபத்தினை
முடித்து வைத்திடும் அணைப்புகள்...

விரல் சொடுக்கியபடியே
நீ தெரிவித்திடும் விருப்பங்கள்...

நேரமாகிவிட்டதென கடிகாரத்திடம்
சொல்லிவிட்டு என் தோள் சாய்ந்தபடியே
நீ செய்திட்ட நிமிட நீட்டிப்புகள்....

இதோடு கடைசிஎன சொல்லிச் சொல்லியே
நடுநிசி வரையிலான குறுஞ்செய்திகள்...

தனக்கான விருப்பங்கள் இன்றியும்
எனக்காய் பிடித்ததை காட்டிடும் அன்பும்...

காய்ச்சலில் வீழ்ந்த என்னைவிட
என்னை எண்ணியபடியே
சோர்ந்து போன உன் முகமும்...

என் சிறுவயது புகைப்படம் பார்த்ததும்
நானும் உன்னிடத்தில் பெற்றிடாத
முத்தங்களும், கொஞ்சல்களும், வர்ணனைகளும்....

எதிர்காலம் முழுவதும் எல்லாம்
அனாயசயமாய் வார்த்தைகளிலே
வாழ்ந்து கழித்த நிமிடங்கள்...

என இப்படியே வாழ்ந்திடத் தோணுதடி
இதில் எவையேனும் ஒன்றினையும்
அனுபவித்திட முடியுமாஎன்ற எண்ணத்திலே
காதல் வாழ்க்கையே போதுமென
என்னிதயம் கெஞ்சி மன்றாடுகிறது என்னிடம்
திருமணம் பற்றி நீ பேசிய நொடிகளில்....

No comments:

Post a Comment