Monday 29 August, 2011

மடிக்கப்படும் போர்வை

அர்த்த ராத்திரியில்
அர்த்தமற்ற நினைவுகள் வியாப்பிக்க,
வியர்வைப் பூக்கள்
மெல்ல எட்டிப் பார்க்கும்...

நொடி முள்ளின்
கட்டாய புரந்தள்ளல்களில்
வெறுமையோடு
நகரும் நிமிடங்கள்...

கண்கள் இறுக
மூடிப் படுத்தாலும்,
வெற்று திசையில்
நிலை குத்தும் பார்வை...

வடிந்து போகும் வடிகாலும்
தலை அமிழ்த்தி
மூழ்கிக் கிடக்கும்
கண்ணீரில்...

என் தூக்கமற்ற
இரவின் அடையாளமாய்
உடலின் அசைவுகளில்,
புரண்ட தடயங்களில்,
கசங்கிப் போன போர்வை
மடிக்கப்படுகிறது
என் மறுநாளுக்கான
உறக்கத்திற்கு...

No comments:

Post a Comment