Tuesday 2 August, 2011

முத்தச் சுவை

நான் முத்தம் தந்த கன்னத்தை
உடனே துடைத்துவிட்டாள்...
என்னவென்று கேட்கையில்
உன் எச்சிலின் சுவை
எறும்பு, தேனிக்கு இல்லை,
எனக்கு மட்டுமே சொந்தமென
மறு கன்னம் காட்டினாள்....
சரி எதற்கு வீண் செய்ய என்று
காட்டிய கன்னம் புறம்தள்ளி
இதழ் பற்றினேன்..
அவள் மட்டுமே சுவைத்திட...

No comments:

Post a Comment