உன்னோடு சேர்ந்து
வாழ நினைத்த
வாழ்க்கை நிமிடங்கள் யாவும்
அனாதையாகத் தான்
சுற்றித் திரிகிறது...
புன்னகைப் பொய் வேடமிட்ட
எந்தன் பகல் வேளை நொடிகள்,
அரிதாரம் களைத்து,
நிஜ முகத்தில்
உப்பு கரித்த கன்னத்தோடு..
நாம் சந்தித்துக் கொண்ட
சமயங்களை மிகச் சரியாய்
நினைவு படுத்தி சுழற்றுகிறது
தோலுரிக்கும் சாட்டையினை
எந்தன் மனம் உரிக்க...
நெற்றிப் பொட்டில் வைக்கப்பட்ட
துப்பாக்கி முனையில்,
கழிகிறது வாழ்நாட்கள்,
பட படப்பிலும்
கண்ணீரில் வெளியேறும்
உயிரின் பரிதவிப்பிலும்...
No comments:
Post a Comment