சுவற்றின் புள்ளியிலே
வெறிச்சோடிப் போன
என் பார்வைகள்...
சில நொடி மகிழ்ச்சிக்கு
ஏங்கி ஏங்கி விரக்தியில்
வெறுத்துப் போன மனம்...
தகித்துப் போன
உந்தன் பார்வையில்
வியர்வையாய் வெளியேறிய
எந்தன் தைரியம்....
ஒவ்வொரு முகமாய்
தன் தாய் தேடும் பறவையாய்,
உன் வருகை காணும்
என் நாட்கள்....
உன் நினைவுகள்
தின்று தீர்த்தத்தில் மிச்சமாய்,
உருவமற்று கிடக்கும்
உனக்கான என் காதல்....
No comments:
Post a Comment