Monday 29 August, 2011

உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள்

உன்னோடு
நான் வாழ்ந்த காலங்கள்,
விடியாத இரவாய்
நீண்டு கொண்டே தான் இருக்கிறது...

பனி கொண்ட இலையாய்
உன் உமிழ் நீர் கண்ட
கன்னங்களின்
சொந்தக்காரனாய்
சிறு கர்வம்...

ஏழைக்கு கிடைத்த
பொன் முட்டையிடும் வாத்தாய்
என் ஒவ்வொரு நாளும்
உன் புன்னகையில்
செழித்து வளர்ந்த நாட்கள்...

உப்புக்கும் வைரத்திற்கும்
வித்தியாசம் அறியாதவனிடம்
சிக்கிய வைரமாய்
உன் உண்மைக் காதல்...

உன் கன்னம்
பிய்த்து தின்று பசியாறி,
வருடல்களில் தொடங்கி
முத்த வார்ப்புகளில்
முடிந்த நாளிகைகள்...

உன் தெற்றுப்பல் சிரிப்பிற்காக
எண்பது வயதில் நீ சிரிக்கும்
பொக்கை வாய் சிரிப்பை
சிரித்துக் காட்டிட,
உன் சிரிப்பு அடங்க
ஆகிடும் நிமிடங்கள்...

உன்னுடன் கழிந்த
எனக்கான வாழ்க்கை யாவும்
கடலில் சேர்ந்த நதியாய்
உப்புக் கரித்தாலும்,
உயிர் வாழும் மீனாக
நீந்திக் கொண்டிருக்கிறது
மீதமுள்ள வாழ்க்கை...

No comments:

Post a Comment