எதிர்பார்க்கும் பொழுதெல்லாம்
தேவையற்றுப் போய்,
பின் எதிர்பாரா நேரம்
கண்ணீரில் அமிழ்த்தும்
உந்தன் அழைப்புகளிலும்...
நெருங்கி கன்னம் கவ்விட
வரும் வேளைகளில் விலகி,
பின் நீயெனக்குத் தரும்
முத்தங்களிலும்...
வெறிச்சோடிய பொழுதுகளில்
நொடிகள் கடத்த,
அழைப்பின்றி கிறுக்கிடும்
உன் பெயர்களிலும்,
இரண்டு மணி நேரம்
உடனிருந்தது எல்லாம்
என் காதல் பசிக்குப்
போதவில்லை என
கிளம்பிடும் முன்
தலை திருப்பல்களிலும்...
எனக்கான உன் காதல்
பிரதிபலித்த அழகை
கண்டுவிட்டது அன்பே
சந்தோசக் கண்ணீரில்
நம் காதல்....
No comments:
Post a Comment