Sunday 17 June, 2012

நீயின்றி பயணம்

நமக்குப் பிடித்த இள மாலை
நமக்குப் பிடித்த குளிர் வேளை
நமக்குப் பிடித்த வெயில் மறைத்த மேகம்,
நமக்குப் பிடித்த நீர் கோர்த்த காற்று
நமக்குப் பிடித்த மண் வாசனை,
நமக்குப் பிடித்த ஊசிச் சாரல்,
நமக்குப் பிடித்த நுழைவு வாயில் வானவில், 

நமக்குப் பிடித்த மணல் நடுவே தார் சாலை,
நமக்குப் பிடித்த கை கோர்த்த தனிமைப் பயணம்
நமக்குப் பிடித்த காதலோடு
உனக்குப் பிடித்த நான்
எனக்குப் பிடித்த உன்னை
எண்ணியபடியே பயணம் நீயின்றி...

No comments:

Post a Comment