எங்கேயடி நீ.
எனக்காக பிறந்தவள் நீ எங்கே.
என் தோள் சாயாமல்
தலையணை சாய்ந்திருக்கும் நீ எங்கே..
கார் கூந்தல் போர்வையில்
என்னை மறைத்திடும் நீ எங்கே...
முதல் முறை
பருவம் வந்த குழந்தையாய்
நான் தரப் போகும்
முத்தம் பெறும் நீ எங்கே...
நான் தந்திடும் காத்திருப்புகளில்
இன்பம் காணப்போகும்
என் இதயம் நீ எங்கே...
என் தோழிக்கும் அன்னைக்கும்
இடைப்பட்ட உறவைக் காட்டிடும்
புது உறவு நீ எங்கே...
என் முக பாவங்களில்
உன் செயல் காட்டிடும்
என் பிம்பம் நீ எங்கே...
எனக்காய் சேர்த்து வைத்த
செல்லக் கோப புதையல் நீ எங்கே...
கண்ணோடு உனை காணாமலும்
நெஞ்சோடு அணைக்காது வேளையிலும்
நான் தேடும் நீ எங்கே...
என் பகலின் காதலாய்
இரவின் காமமாய்
முரண்பட்ட குவியல் நீ எங்கே..
உனது அழகையும்,
எனது அறிவையும்
அச்சில் வார்த்து வரும்
வாரிசு தரும் நீ எங்கே...
சீக்கரம் வாடி அன்பே
உன்னில் கரைந்து
என் வாழ்வின் அர்த்தம்
முழுமையடைய
உனக்காய் காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
காதலின் வாக்கியத்திலே
நம் வாழ்வும் முடிந்திட
காத்திருக்கும் உன்னவன்.
எனக்காக பிறந்தவள் நீ எங்கே.
என் தோள் சாயாமல்
தலையணை சாய்ந்திருக்கும் நீ எங்கே..
கார் கூந்தல் போர்வையில்
என்னை மறைத்திடும் நீ எங்கே...
முதல் முறை
பருவம் வந்த குழந்தையாய்
நான் தரப் போகும்
முத்தம் பெறும் நீ எங்கே...
நான் தந்திடும் காத்திருப்புகளில்
இன்பம் காணப்போகும்
என் இதயம் நீ எங்கே...
என் தோழிக்கும் அன்னைக்கும்
இடைப்பட்ட உறவைக் காட்டிடும்
புது உறவு நீ எங்கே...
என் முக பாவங்களில்
உன் செயல் காட்டிடும்
என் பிம்பம் நீ எங்கே...
எனக்காய் சேர்த்து வைத்த
செல்லக் கோப புதையல் நீ எங்கே...
கண்ணோடு உனை காணாமலும்
நெஞ்சோடு அணைக்காது வேளையிலும்
நான் தேடும் நீ எங்கே...
என் பகலின் காதலாய்
இரவின் காமமாய்
முரண்பட்ட குவியல் நீ எங்கே..
உனது அழகையும்,
எனது அறிவையும்
அச்சில் வார்த்து வரும்
வாரிசு தரும் நீ எங்கே...
சீக்கரம் வாடி அன்பே
உன்னில் கரைந்து
என் வாழ்வின் அர்த்தம்
முழுமையடைய
உனக்காய் காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
காதலின் வாக்கியத்திலே
நம் வாழ்வும் முடிந்திட
காத்திருக்கும் உன்னவன்.
No comments:
Post a Comment