ஒவ்வொரு முறையிலான
ஓரப் பார்வையில்
என்னுயிர் வெளியேற்ற...
என் உடல் நீ கடந்து
என்னருகில் நடக்கையில்,
என்னுயிர் உடல் விலகி
உன்னுடன் நடை பழக...
தட்டில் சோறிட்டும்,
வயிற்ருக்கு தண்ணி காட்டி
உன் நினைவில்
விரல்கள் கோலமிட,
படுக்கை விரித்து
தூங்க ஒத்திகை காட்டி
உறக்கத்தை ஏமாற்ற...
எதிரே நீ வர
தைரியமாய் நானும்,
கனவில் மட்டும்
சிரித்து பேச...
தெனாவட்டும்
துடுக்குப் பேச்சும்
உன்னிடம் மட்டும்
வாலைச் சுருட்ட...
தனிமையின் எதிரி
இன்று ரசிகனாய்...
நிஜமில்லை எனத் தெரிந்தும்
நினைவுகளோடு நேசம்...
உன் பெயர் கொண்ட
குழந்தையிடம் அலாதி பிரியம்...
இன்னும் சொல்லப் போனால்
மழலையின் முத்தம்
உன்னதாய் தெரியும்...
இதுவெல்லாம்
காதலின் அடையாளமோ...
இல்லை என் இதயத்தை
உரிமை கொண்டதற்கு
நீ தரும் பட்டா பத்திரமா....
தினம் தினம்
உன் ஓரப் பார்வையில்
கல்லூன்றி செல்லடி...
என் இதயத்தை
வேலிட்டுக் காக்கிறேன்
உன் காதல் காலடி
என் மீது படுவதற்கு...
No comments:
Post a Comment