பூந்தோட்டம் செல்லாதே இனிமேல்...
பூக்களும் உன்மேல் ஆசை கொண்டு
உன்னைத் தலைவியாய் மாற்றி
தன் கூட்டத்தோடே வைத்துக்கொள்ள
திட்டமிடுகின்றனவாம்...
Saturday, 25 December 2010
கேள்வி
கடைசியாய்
கேட்டே விட்டன தேனிக்கள்..
உன் மலரில் மட்டும்
எப்படி தினமும் தேனுருகிறது...
தினம் நீ பருகிட மட்டும்...
கேட்டே விட்டன தேனிக்கள்..
உன் மலரில் மட்டும்
எப்படி தினமும் தேனுருகிறது...
தினம் நீ பருகிட மட்டும்...
ஏமாற்றம்
கோடைகால வெப்பத்தில்
மலர்கள் யாவும் வாடிட
தேனெடுக்க வழியின்றி
ஆயாசமாய்த் திரிகையில்,
பெரியதொரு தேன்கிண்ண மலரென
உன் இதழ்களை மொய்த்திட
எண்ணி அருகில் வருகையில்,
உன் இதழ்களை
நான் சுவைப்பதைப் பார்த்து
ஏமாந்து தான் போகிறது தேனீக்களும்...
மலர்கள் யாவும் வாடிட
தேனெடுக்க வழியின்றி
ஆயாசமாய்த் திரிகையில்,
பெரியதொரு தேன்கிண்ண மலரென
உன் இதழ்களை மொய்த்திட
எண்ணி அருகில் வருகையில்,
உன் இதழ்களை
நான் சுவைப்பதைப் பார்த்து
ஏமாந்து தான் போகிறது தேனீக்களும்...
வண்ணத்துப்பூச்சி
நான் செல்லும் வழியெங்கும்
ஒரு வண்ணத்துப் பூச்சியினையும்
காணவில்லையென அப்பாவியாய்
கேட்கிறாய் எல்லாம் செய்துவிட்டு...
உன்னிமைகள் படபடப்பைக் கண்டு
நீ பூப்படைந்த நாள்முதலே
இனியும் இங்கிருத்தல்
அழகில்லையென நாணி
நீ உலவும் இடம்விடுத்து
இடம் பெயர்ந்து விட்டதே...
ஒரு வண்ணத்துப் பூச்சியினையும்
காணவில்லையென அப்பாவியாய்
கேட்கிறாய் எல்லாம் செய்துவிட்டு...
உன்னிமைகள் படபடப்பைக் கண்டு
நீ பூப்படைந்த நாள்முதலே
இனியும் இங்கிருத்தல்
அழகில்லையென நாணி
நீ உலவும் இடம்விடுத்து
இடம் பெயர்ந்து விட்டதே...
Friday, 24 December 2010
உன் அழகு
நேற்று நீ
கோவிலுக்குச் சென்றாயா என
என் காதலியை வினவினேன்...
ஆமாம். நீ எப்படி அறிந்தாயென
கேள்வியை திருப்பி வைத்தாள்...
உன் அழகில் மயங்கி
கர்வம் ஒழித்து,
சிற்ப்பங்கள் ஏதுமின்றி
வெறிச்சோடிய கோவிலைக்
கண்டதும் தாண்டி கேட்டேன்...
கோவிலுக்குச் சென்றாயா என
என் காதலியை வினவினேன்...
ஆமாம். நீ எப்படி அறிந்தாயென
கேள்வியை திருப்பி வைத்தாள்...
உன் அழகில் மயங்கி
கர்வம் ஒழித்து,
சிற்ப்பங்கள் ஏதுமின்றி
வெறிச்சோடிய கோவிலைக்
கண்டதும் தாண்டி கேட்டேன்...
நீயும் சிலையும்
கோவில் சிற்பமும்
நீயும் ஓன்றுதானடி...
அழகில் மட்டுமில்லை -
என் கோரிக்கைகளுக்கு
செவி சாய்த்திடா
கல் மனதிலும்...
நீயும் ஓன்றுதானடி...
அழகில் மட்டுமில்லை -
என் கோரிக்கைகளுக்கு
செவி சாய்த்திடா
கல் மனதிலும்...
தியானம்
கோவிலில் தியானம்
செய்யாதே என்றால்
எங்கே அன்பே கேட்கிறாய்...
இப்பொழுது பாரடி
உன்னை சிலையென எண்ணி
அலங்கரிக்க தொடங்கிவிட்டனர்...
செய்யாதே என்றால்
எங்கே அன்பே கேட்கிறாய்...
இப்பொழுது பாரடி
உன்னை சிலையென எண்ணி
அலங்கரிக்க தொடங்கிவிட்டனர்...
வேண்டுதல்
கோவில் வந்து வேண்டியதில்
உனது வேண்டுதல்
பழித்ததோ இல்லையோ?
உனது நெற்றியில்
ஏற வேண்டுமென்ற
குங்குமத்தின் வேண்டுதல்
ஈடேரிதான் விட்டது...
உனது வேண்டுதல்
பழித்ததோ இல்லையோ?
உனது நெற்றியில்
ஏற வேண்டுமென்ற
குங்குமத்தின் வேண்டுதல்
ஈடேரிதான் விட்டது...
பிரகாரம்
வாழ்க்கையில் என்னைத் தான்
உன் பின்னால் சுற்றிட வைத்தாய் என்றால்
கோவிலினுள் சிலையாய் வந்த
பூத கணங்களையும் அல்லவா
உன் பின்னே சுற்ற செய்திட்டாய்
பிரகாரம் சுற்றும் பொழுது...
உன் பின்னால் சுற்றிட வைத்தாய் என்றால்
கோவிலினுள் சிலையாய் வந்த
பூத கணங்களையும் அல்லவா
உன் பின்னே சுற்ற செய்திட்டாய்
பிரகாரம் சுற்றும் பொழுது...
விளக்கு
நீ
விளக்கேற்றுகையில் மட்டும்
எல்லா விளக்குகளுமே,
அணைவது ஏனோ?
உனைக் கண்டதும்
உயிர் துறந்து
உன் ஏற்றலில் மீண்டும்
உயிர்த்தெழுந்து பிரகாசித்திடவா?
விளக்கேற்றுகையில் மட்டும்
எல்லா விளக்குகளுமே,
அணைவது ஏனோ?
உனைக் கண்டதும்
உயிர் துறந்து
உன் ஏற்றலில் மீண்டும்
உயிர்த்தெழுந்து பிரகாசித்திடவா?
சிலை
கோவில் விட்டு வெளியே வந்து
காலனி மாட்டும் பொழுது தானடி
சிலையொன்று தான் என்னெதிரே
நடமாடுவதை எண்ணி வந்த
எனக்கு உரைத்தது நீ பெண்ணென்று...
காலனி மாட்டும் பொழுது தானடி
சிலையொன்று தான் என்னெதிரே
நடமாடுவதை எண்ணி வந்த
எனக்கு உரைத்தது நீ பெண்ணென்று...
Thursday, 23 December 2010
பெயர்
இனிமேலும் அர்ச்சனை செய்திட
நீ செல்லாதடி சகியே...
உன் உதடுகளில்
உன் பெயரைச் சொன்னதும்,
இப்பொழுதெல்லாம் yaraith
உன் பெயரைத் தான்
மந்திரமாய் ஜெபிக்கிறார் அர்ச்சகரும்...
நீ செல்லாதடி சகியே...
உன் உதடுகளில்
உன் பெயரைச் சொன்னதும்,
இப்பொழுதெல்லாம் yaraith
உன் பெயரைத் தான்
மந்திரமாய் ஜெபிக்கிறார் அர்ச்சகரும்...
படைப்பு
கோவில் சிற்ப்பங்கள் யாவும்
உன் தந்தையை தேடுகின்றன...
உன்னைப் போலவே அவைகளையும்
அழகாய் படைத்திட வேண்டி..
உன் தந்தையை தேடுகின்றன...
உன்னைப் போலவே அவைகளையும்
அழகாய் படைத்திட வேண்டி..
ஆராதனை
கர்ப்பக்கிரகம் அருகில் சென்று
தரிசனம் செய்யாதே என்று
எத்தனை முறை தாண்டி சொல்வது...
இப்பொழுது பார் - அர்ச்சகர்
உனக்கு தீபாராதனை காட்டுகிறார்...
தரிசனம் செய்யாதே என்று
எத்தனை முறை தாண்டி சொல்வது...
இப்பொழுது பார் - அர்ச்சகர்
உனக்கு தீபாராதனை காட்டுகிறார்...
வாலி
எதிர்ப்பவரின் பலம் பாதி பெற்றிடும்
இராமாயண வாலியின்
ஜாதி போல தானடா நீயும்...
உன்னை நோக்கும் வேளையில்
என் தைரியம் நீ எடுத்து,
என்னைப் பார்க்கிறாய் - என்னை
மண்ணைப் பார்க்க வைத்து விட்டு...
இராமாயண வாலியின்
ஜாதி போல தானடா நீயும்...
உன்னை நோக்கும் வேளையில்
என் தைரியம் நீ எடுத்து,
என்னைப் பார்க்கிறாய் - என்னை
மண்ணைப் பார்க்க வைத்து விட்டு...
Tuesday, 21 December 2010
சந்திப்பு
மாலை ஆறு மணி..
சந்திக்க வரச் சொன்னாள் தனியே...
நேரத்திற்கு வருவது அவளது வழக்கம்.
நேரத்தை விழுங்கி வருவது
என் பழக்கம்...
வந்த நொடி முதல்
எனைப் பார்த்துக் காத்திருப்பாள்.
நொடிகளையும் நிமிடமாய் நகர
விரட்டிக் கொண்டிருப்பாள்...
இதழ்கள் என்னை கடிந்து கொண்டும்,
என் காதல் அவள் பற்களிடையே
சிக்கிக் கொண்டிருக்கும்...
என் சாயல் தலை காண
அல்லியாய் அவள் முகம் பூத்திருக்கும்..
இல்லையென்ற பின் ஏமாற்றத்தில்
முகத்தில் கடுகு, எள் வெடித்திருக்கும்..
காத்திருக்கும் நொடிகள்
நகர்வதைக் காட்டிலும் - என்
மேலுள்ள கோவம் கூடிருக்கும்.
கீழ்வானம் சிவந்ததைக் கூட - அவள்
கன்னம் சிவந்து உணர்த்திடும்...
சினத்தின் பெருமூச்சின் வெப்பத்தில்
பனியும் அடி ஒன்று
அவளைச் சுற்றியே பொழியும்...
நான் மெல்ல தலை காட்ட
என்னவள் கோபத்தின் எல்லை கண்டு
சூரியனும் இருளில் மறைந்து கொள்ள,
என்ன, ஏதென்று நொடிகள் ஸ்தம்பிக்க,
வந்ததும் கத்தித் தீர்த்தாள் சினத்தை
பெய்து தீர்த்திடும் மேகமாய்...
காத்திருந்த காலத்தையும்
சேர்த்தே காய்ச்சி எடுப்பாள்...
சினம் அமர்த்த கெஞ்சிடுவேன்.
அவளோ மிஞ்சிடுவாள்.
மிஞ்சியதும் முறைத்துக் கொள்வேன்.
என்மேல் தவறில்லா அப்பாவியாய்...
மிஞ்சிய என்னவள் இப்பொழுது
கெஞ்சலில் என்னை மிஞ்சிட,
மிச்ச மீதி நேரத்தையும்
உறைய வைத்திட கட்டிக் கொள்வாள்..
என் முகமேங்கிலும்
முத்தத்தால் நனைத்திடுவாள்..
இரவினைக் குளிர்விக்க வேண்டி
மெல்ல எட்டிப் பார்க்கும் நிலவும்
திரும்பப் போக வேண்டியதாயிற்று
எங்கள் கூடலின் குளுமை கண்டு...
சந்திக்க வரச் சொன்னாள் தனியே...
நேரத்திற்கு வருவது அவளது வழக்கம்.
நேரத்தை விழுங்கி வருவது
என் பழக்கம்...
வந்த நொடி முதல்
எனைப் பார்த்துக் காத்திருப்பாள்.
நொடிகளையும் நிமிடமாய் நகர
விரட்டிக் கொண்டிருப்பாள்...
இதழ்கள் என்னை கடிந்து கொண்டும்,
என் காதல் அவள் பற்களிடையே
சிக்கிக் கொண்டிருக்கும்...
என் சாயல் தலை காண
அல்லியாய் அவள் முகம் பூத்திருக்கும்..
இல்லையென்ற பின் ஏமாற்றத்தில்
முகத்தில் கடுகு, எள் வெடித்திருக்கும்..
காத்திருக்கும் நொடிகள்
நகர்வதைக் காட்டிலும் - என்
மேலுள்ள கோவம் கூடிருக்கும்.
கீழ்வானம் சிவந்ததைக் கூட - அவள்
கன்னம் சிவந்து உணர்த்திடும்...
சினத்தின் பெருமூச்சின் வெப்பத்தில்
பனியும் அடி ஒன்று
அவளைச் சுற்றியே பொழியும்...
நான் மெல்ல தலை காட்ட
என்னவள் கோபத்தின் எல்லை கண்டு
சூரியனும் இருளில் மறைந்து கொள்ள,
என்ன, ஏதென்று நொடிகள் ஸ்தம்பிக்க,
வந்ததும் கத்தித் தீர்த்தாள் சினத்தை
பெய்து தீர்த்திடும் மேகமாய்...
காத்திருந்த காலத்தையும்
சேர்த்தே காய்ச்சி எடுப்பாள்...
சினம் அமர்த்த கெஞ்சிடுவேன்.
அவளோ மிஞ்சிடுவாள்.
மிஞ்சியதும் முறைத்துக் கொள்வேன்.
என்மேல் தவறில்லா அப்பாவியாய்...
மிஞ்சிய என்னவள் இப்பொழுது
கெஞ்சலில் என்னை மிஞ்சிட,
மிச்ச மீதி நேரத்தையும்
உறைய வைத்திட கட்டிக் கொள்வாள்..
என் முகமேங்கிலும்
முத்தத்தால் நனைத்திடுவாள்..
இரவினைக் குளிர்விக்க வேண்டி
மெல்ல எட்டிப் பார்க்கும் நிலவும்
திரும்பப் போக வேண்டியதாயிற்று
எங்கள் கூடலின் குளுமை கண்டு...
தடை
மார்கழி இரவினை
உன்னோடு கழித்திட
வேண்டுகிறது என்னுடல்...
அவ்வாறு கழியுமென்றால்.
களியாட்ட வெப்பத்தில்,
கடுங்குளிரும் கோடையாகிப்
போகுமென எச்சரித்து
தடை போடுகிறது மனம்...
உன்னோடு கழித்திட
வேண்டுகிறது என்னுடல்...
அவ்வாறு கழியுமென்றால்.
களியாட்ட வெப்பத்தில்,
கடுங்குளிரும் கோடையாகிப்
போகுமென எச்சரித்து
தடை போடுகிறது மனம்...
பாராட்டு
உன் அசைவிலே
ஆயிரம் கவிதைகள் சொல்கிறாய்
ஒன்று ரெண்டாய்
கற்பனையில் கவி தேடும்
என்னைப் புகழ்கிறார்கள்...
ஆயிரம் கவிதைகள் சொல்கிறாய்
ஒன்று ரெண்டாய்
கற்பனையில் கவி தேடும்
என்னைப் புகழ்கிறார்கள்...
Monday, 20 December 2010
இப்பவே கண்ண கட்டுதே
என்னைக் காணாத நிலைவந்தால்
என்ன செய்வாயென வினவினாள்.
பட்டினியாய் பசலை நோய் கண்டு
சருகாய் காய்ந்திடுவேன் என
எதிர்பார்த்திட்டாள் போலும்..
வழக்கம் போலவே நானிருப்பேன்
மூவேளை உணவையும் உண்டிடுவேன்
எனச் சொல்லித் தொலைய...
காதல் கண்களில் கோவத் தீப்பொறியிட
பேசாதே என் நிழலோடும் என
சினத்தில் திரும்பிக் கொண்டாளவள்..
நம் பாதம் பதித்த இடமெங்கிலும்
உனைத் தேடிப்பார்த்திடவும்,
கலங்காது கழனிஎங்கும் களைப்புறாமல்
தேடிட வேண்டிடும் கால்களுக்கும்,
உன் நினைவிலே எரிந்து கரையும்
என்னிதயம் பறைசாற்றிட வழிந்திடும்
கண்களுக்காகவும் உண்டிட
வேண்டுமென மொழிந்தேன்...
என் கூற்று மெய்யென நம்பி
கட்டிக் கொண்டு என்னை முழுமையாய்
ஆட்சி செய்தாள் காதல் மகாராணி
ஒரு சான் வயிற்றிக்கு என்னவெல்லாம்
கூற வேண்டியுள்ளதென எண்ணுகையில்,
அடுத்த கேள்விக்கு என்னவள் எத்தனிக்க
கண்ணைக் கட்டுகிறது எனக்கு..
என்ன செய்வாயென வினவினாள்.
பட்டினியாய் பசலை நோய் கண்டு
சருகாய் காய்ந்திடுவேன் என
எதிர்பார்த்திட்டாள் போலும்..
வழக்கம் போலவே நானிருப்பேன்
மூவேளை உணவையும் உண்டிடுவேன்
எனச் சொல்லித் தொலைய...
காதல் கண்களில் கோவத் தீப்பொறியிட
பேசாதே என் நிழலோடும் என
சினத்தில் திரும்பிக் கொண்டாளவள்..
நம் பாதம் பதித்த இடமெங்கிலும்
உனைத் தேடிப்பார்த்திடவும்,
கலங்காது கழனிஎங்கும் களைப்புறாமல்
தேடிட வேண்டிடும் கால்களுக்கும்,
உன் நினைவிலே எரிந்து கரையும்
என்னிதயம் பறைசாற்றிட வழிந்திடும்
கண்களுக்காகவும் உண்டிட
வேண்டுமென மொழிந்தேன்...
என் கூற்று மெய்யென நம்பி
கட்டிக் கொண்டு என்னை முழுமையாய்
ஆட்சி செய்தாள் காதல் மகாராணி
ஒரு சான் வயிற்றிக்கு என்னவெல்லாம்
கூற வேண்டியுள்ளதென எண்ணுகையில்,
அடுத்த கேள்விக்கு என்னவள் எத்தனிக்க
கண்ணைக் கட்டுகிறது எனக்கு..
ஆசை
நான் பெண்ணாக மாறிப்போனால்
எப்படி இருப்பேன் எனக் கேட்டேன்
எதிர் நிற்கும் காதலியிடம்...
அடப் போடா பைத்தியம்
இப்பொழுதும் நானாகத் தானடா
நீ வாழ்கிறாய் பிறகென்ன ஆசையென்று
தலை கொட்டிச் செல்கிறாள்...
எப்படி இருப்பேன் எனக் கேட்டேன்
எதிர் நிற்கும் காதலியிடம்...
அடப் போடா பைத்தியம்
இப்பொழுதும் நானாகத் தானடா
நீ வாழ்கிறாய் பிறகென்ன ஆசையென்று
தலை கொட்டிச் செல்கிறாள்...
அழகுக்கு அழகு
தான் தான் அழகென்றும்
அதனால் தான் நீ
சூடிக் கொண்டாய் என
கர்வக் களிப்பில் கெக்கரிக்கிறது
அன்பே ரோஜா...
அழகிற்கு அழகு
சேர்த்திட வேண்டித்தான்
நீ சூடியதெனத் தெரியாமல்...
அதனால் தான் நீ
சூடிக் கொண்டாய் என
கர்வக் களிப்பில் கெக்கரிக்கிறது
அன்பே ரோஜா...
அழகிற்கு அழகு
சேர்த்திட வேண்டித்தான்
நீ சூடியதெனத் தெரியாமல்...
பாவம்
உன் தலையில்
மல்லிகைப் பூவினைச் சூடியதும்,
ரொம்பவே கர்வப் பட்டு
பிதற்றுகிறது அன்பே
உன்னில் சேர்ந்துவிட்டதென...
விடியும் வரையிலான
நம் காதல் விளையாட்டில்
வெந்து, நசுங்கி, காய்ந்து
உயிர்விடப் போவது தெரியாமல்
- பாவம்...
மல்லிகைப் பூவினைச் சூடியதும்,
ரொம்பவே கர்வப் பட்டு
பிதற்றுகிறது அன்பே
உன்னில் சேர்ந்துவிட்டதென...
விடியும் வரையிலான
நம் காதல் விளையாட்டில்
வெந்து, நசுங்கி, காய்ந்து
உயிர்விடப் போவது தெரியாமல்
- பாவம்...
பூக்களின் பரிசு
பூக்களைப் பரிசளித்து தான்
காதலைச் சொல்வார்களாம்...
பூக்களுக்கும் காதல் வந்து விடில்?
அஞ்சாதே கண்மணி...
உன்னை தான் நான்
இறுகக் கரம் பிடித்து
கட்டி அணைத்துள்ளேனே...
காதலைச் சொல்வார்களாம்...
பூக்களுக்கும் காதல் வந்து விடில்?
அஞ்சாதே கண்மணி...
உன்னை தான் நான்
இறுகக் கரம் பிடித்து
கட்டி அணைத்துள்ளேனே...
மரணம்
மரணமும்
என்னை அழைத்திட
தடுமாறித்தான் போகுமடி...
ஒரு நாள்
உன்னைப் பிரிந்ததற்க்கே
நான்பட்ட
அவஸ்தைகளை கண்டு...
என்னை அழைத்திட
தடுமாறித்தான் போகுமடி...
ஒரு நாள்
உன்னைப் பிரிந்ததற்க்கே
நான்பட்ட
அவஸ்தைகளை கண்டு...
தேடல்
தேடிக் கொண்டிருக்கிறேன்
காற்றின்றி வாழக்கூடும் இடத்தினை..
என்னைவிடவும் என்னவளை
அதிகம் சீண்டுவது - அந்தக்
களவாணிப் பயல் காற்று தானே...
காற்றின்றி வாழக்கூடும் இடத்தினை..
என்னைவிடவும் என்னவளை
அதிகம் சீண்டுவது - அந்தக்
களவாணிப் பயல் காற்று தானே...
Friday, 17 December 2010
நன்றி காதலா
என் மடியில் படுத்துக் கொண்டு
என் விரல்களில் சொடுக்கியபடியே
நன்றி சொன்னாள் என்னவள்...
ஏனென்று வினவிக் கேட்கையில்
என் மடியில் நீ படுத்துறங்கும் போது
உன் தலை கோதி, கன்னம் வருடி
நீ தூங்கும் அழகை இரசித்திடும்
ஒரு தாயின் நிலையை
தொட்டடைந்தேன் காதலா...
தனிமையில் உன் மடியினில்
நானும் தலை சாய்த்திடுகையில்
காதலனின் கதகதப்பும்,
அன்பின் அரவணைப்புமாய்
ஒரு சேரக் கண்டேன் காதலியாய்...
நெஞ்சில் சுமந்த காதலுக்கும்
மனதில் சுமந்த மழலைக்கும்
உண்டான சுகத்தினை தந்தமைக்கு
தானென்று முத்தமிட்டாள்
கண்ணடித்தபடி...
என் விரல்களில் சொடுக்கியபடியே
நன்றி சொன்னாள் என்னவள்...
ஏனென்று வினவிக் கேட்கையில்
என் மடியில் நீ படுத்துறங்கும் போது
உன் தலை கோதி, கன்னம் வருடி
நீ தூங்கும் அழகை இரசித்திடும்
ஒரு தாயின் நிலையை
தொட்டடைந்தேன் காதலா...
தனிமையில் உன் மடியினில்
நானும் தலை சாய்த்திடுகையில்
காதலனின் கதகதப்பும்,
அன்பின் அரவணைப்புமாய்
ஒரு சேரக் கண்டேன் காதலியாய்...
நெஞ்சில் சுமந்த காதலுக்கும்
மனதில் சுமந்த மழலைக்கும்
உண்டான சுகத்தினை தந்தமைக்கு
தானென்று முத்தமிட்டாள்
கண்ணடித்தபடி...
பயணம்
போட்டி
வள்ளல்
Monday, 13 December 2010
கர்வம்
Saturday, 11 December 2010
காதலே இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்...
காதலுக்காய் காத்திருப்போருக்கெல்லாம்
எட்டாக் கனியாகி - கனவிலும்
காதலிக்கா என் மனதில் ஏனடி உதித்தாய்....
முட்செடிகளைப் போன்றதொரு வாழ்க்கையினில்
பெரும்பகுதி கழித்த பின்னர்
பூந்த்தோட்டத்திற்கு ஏனடி ஏதிர்பார்க்க வைத்தாய்...
பெயருக்கும் பாசத்தைப் பார்த்திரா
பாலையாகிப் போன பாழான இதயத்தில்
சோலையாக ஏனடி மாற்றிடச் செய்தாய்...
சிரித்துக் கூட பழக்கப்படா என் இதழில்
வாஞ்சையில்லா உன் கன்னம் பிதுங்கும்
சிரிப்பிற்க்காய் ஏனடி என்னை ஏங்கிச் செய்தாய்...
பட்டமரம் போல் வாழ்ந்து
பாசம்பற்றி தெரியாது வளர்ந்து இன்று
உன் அன்பிற்கு ஏனடி பரிதவிக்க வைத்தாய்....
நொடிக்கணக்கில் சிரிப்பும்
மணிக்கணக்கில் மௌனத்தையும்
தோழனாய் வைத்திருந்த என்னை
உன் பேச்சினில் ஏனடி எதிரியாக்கினாய்...
நீ தான் வாழ்க்கை எனத் தெளிந்து
உனக்காய் மாற்றங்களை
மறுப்பேதுமின்றி அணிந்துகொண்டேன்...
உம்மென்ற கோவத்தையும் சிறிது சிறிதாய்
இதழ்களின் அசைவிலே உடைத்தெறிந்தேன்...
கட்டுப்பாடின்றி கட்டவிழ்த்து திரிந்த
என் வாழ்க்கையின் நாட்களை
உன் சொற்களில் கடிவாளமிட்டு
அடிபணியச் செய்திட்டேன்...
உன்னை மட்டும் என் உயிரென
எண்ணித்தான் புதியதாய் ஜனனித்தேன்...
ஒவ்வொரு நொடியிலும் உன் அணைப்பிலே
மறுநொடி பிரிய நேரிட - அப்படியே
உறைந்து போக யோசித்திட்டேன்...
வாஞ்சையில் காதலித்து,
கோபத்தில் கண்டித்து
குறும்பாய் கண்ணடித்து
ஆசையாய் முத்தமிட்டு
ஏமாற்றத்தில் கன்னமறைந்து
காதலில் கட்டியணைத்து
தோல்வியில் தோள்கொடுத்து
கனவிலும் உடன்வந்து
அன்னையாய் ஊட்டிவிட்டு
மழலையாய் கரம்பிடித்து
தோழியாய் தோள்சாய்ந்து
அன்பாய் அரவணைத்து
செயலில் துணை நின்று
உறக்கத்தில் மடி தந்து
விரக்தியில் நிழலாக
வெற்றியில் பரிசாக
உடலில் உயிராக
உயிரில் உணர்வாக
ஏனடி இருந்து தொலைந்தாய்...
இப்படி என்னை மட்டும் தவிக்க வைத்து
நீ மட்டும் தொலைந்து போவதற்கா?
உன் பிரிவால் நான் படும்
என்னிலை உனக்கு உணர்த்த
வார்த்தைகளையும் வலி சுமக்கச் சொல்லி
அதன் கண்ணீரை பார்க்க
விருப்பமில்லை அன்பே - நம் காதலுக்கான
கடைசி கண்ணீர் எனதாகவே இருக்கட்டும்...
உனக்கும் வலித்திருக்கும்
எனக்கும் நன்றாகவே புரியுமடி...
சந்தோசமாய் உள்ளேன் என பொய்யுரைத்து
உன் எண்ணத்தில் கல்லெறிய
துளியும் மனமில்லையடி எனக்கு...
உனது சந்தோசத்திர்க்காய்
என்னவேண்டுமானாலும் பொய்யுரைப்பேன் என்று
என்னைப் பற்றி உனக்குத் தெரியுமென்பதால்...
நினைவு இனிமையாகத் தான் இருந்தது அன்பே
என்னருகில் நீ இல்லாத பொழு - இன்று
அந்த நினைவோ மிகக் கொடியதாய் மாறிவிட்டது
எனக்காய் நீ இல்லாத பொழுது....
மரணத்தை தள்ளி வைத்திடும்
எண்ணமெல்லாம் எனக்கில்லை அன்பே...
என் ஆயுளையும் இரவினையும்
உண்டு பெருத்து அடங்காப் பசியோடு
என் அடுத்தடுத்த நொடிகளை
ருசித்திட இருக்கும்
நம் காதலின் நினைவுகளுக்காகவே
விரும்பியே எதிர்ப்பார்க்கிறேன் மரணத்தை...
உடல் விட்டுப் போன உயிர்
திரும்பிடாத பிணமாகத் தான் வாழ்கிறேன்...
என் சரீரம் நீ விட்டுப் போனதிலிருந்து,
உணர்ச்சியின்றி, மகிழ்ச்சியின்றி
திரியும் என்னைப் பார்த்து தான்
நடைபினமென்னும் வார்த்தை உண்டானதோ...
நான் படும் வலிகள் யாவும் உனக்கும்
உண்டென்று தானடி என்னிதயம் வலிக்கிறது...
உன்னைக் கலங்கிட விடாமல்
உன் தலைகோதி
தனிமை உனையண்டாது விரட்டியடிக்க,,
உன்னையறிந்த நான் உன்னருகில்
இல்லையென்ற ஏக்கத்துடன்,
நொடிக கணத்திலும் பிரிவென்னும் இருளில்
உன் நினைவுத் தீ கொழுந்துவிட்டு எரிய
இதயம் மெழுகாய் உருகி
வாழ்கிறேன் கண்களில் கண்ணீரோடு ...
எட்டாக் கனியாகி - கனவிலும்
காதலிக்கா என் மனதில் ஏனடி உதித்தாய்....
முட்செடிகளைப் போன்றதொரு வாழ்க்கையினில்
பெரும்பகுதி கழித்த பின்னர்
பூந்த்தோட்டத்திற்கு ஏனடி ஏதிர்பார்க்க வைத்தாய்...
பெயருக்கும் பாசத்தைப் பார்த்திரா
பாலையாகிப் போன பாழான இதயத்தில்
சோலையாக ஏனடி மாற்றிடச் செய்தாய்...
சிரித்துக் கூட பழக்கப்படா என் இதழில்
வாஞ்சையில்லா உன் கன்னம் பிதுங்கும்
சிரிப்பிற்க்காய் ஏனடி என்னை ஏங்கிச் செய்தாய்...
பட்டமரம் போல் வாழ்ந்து
பாசம்பற்றி தெரியாது வளர்ந்து இன்று
உன் அன்பிற்கு ஏனடி பரிதவிக்க வைத்தாய்....
நொடிக்கணக்கில் சிரிப்பும்
மணிக்கணக்கில் மௌனத்தையும்
தோழனாய் வைத்திருந்த என்னை
உன் பேச்சினில் ஏனடி எதிரியாக்கினாய்...
நீ தான் வாழ்க்கை எனத் தெளிந்து
உனக்காய் மாற்றங்களை
மறுப்பேதுமின்றி அணிந்துகொண்டேன்...
உம்மென்ற கோவத்தையும் சிறிது சிறிதாய்
இதழ்களின் அசைவிலே உடைத்தெறிந்தேன்...
கட்டுப்பாடின்றி கட்டவிழ்த்து திரிந்த
என் வாழ்க்கையின் நாட்களை
உன் சொற்களில் கடிவாளமிட்டு
அடிபணியச் செய்திட்டேன்...
உன்னை மட்டும் என் உயிரென
எண்ணித்தான் புதியதாய் ஜனனித்தேன்...
ஒவ்வொரு நொடியிலும் உன் அணைப்பிலே
மறுநொடி பிரிய நேரிட - அப்படியே
உறைந்து போக யோசித்திட்டேன்...
வாஞ்சையில் காதலித்து,
கோபத்தில் கண்டித்து
குறும்பாய் கண்ணடித்து
ஆசையாய் முத்தமிட்டு
ஏமாற்றத்தில் கன்னமறைந்து
காதலில் கட்டியணைத்து
தோல்வியில் தோள்கொடுத்து
கனவிலும் உடன்வந்து
அன்னையாய் ஊட்டிவிட்டு
மழலையாய் கரம்பிடித்து
தோழியாய் தோள்சாய்ந்து
அன்பாய் அரவணைத்து
செயலில் துணை நின்று
உறக்கத்தில் மடி தந்து
விரக்தியில் நிழலாக
வெற்றியில் பரிசாக
உடலில் உயிராக
உயிரில் உணர்வாக
ஏனடி இருந்து தொலைந்தாய்...
இப்படி என்னை மட்டும் தவிக்க வைத்து
நீ மட்டும் தொலைந்து போவதற்கா?
உன் பிரிவால் நான் படும்
என்னிலை உனக்கு உணர்த்த
வார்த்தைகளையும் வலி சுமக்கச் சொல்லி
அதன் கண்ணீரை பார்க்க
விருப்பமில்லை அன்பே - நம் காதலுக்கான
கடைசி கண்ணீர் எனதாகவே இருக்கட்டும்...
உனக்கும் வலித்திருக்கும்
எனக்கும் நன்றாகவே புரியுமடி...
சந்தோசமாய் உள்ளேன் என பொய்யுரைத்து
உன் எண்ணத்தில் கல்லெறிய
துளியும் மனமில்லையடி எனக்கு...
உனது சந்தோசத்திர்க்காய்
என்னவேண்டுமானாலும் பொய்யுரைப்பேன் என்று
என்னைப் பற்றி உனக்குத் தெரியுமென்பதால்...
நினைவு இனிமையாகத் தான் இருந்தது அன்பே
என்னருகில் நீ இல்லாத பொழு - இன்று
அந்த நினைவோ மிகக் கொடியதாய் மாறிவிட்டது
எனக்காய் நீ இல்லாத பொழுது....
மரணத்தை தள்ளி வைத்திடும்
எண்ணமெல்லாம் எனக்கில்லை அன்பே...
என் ஆயுளையும் இரவினையும்
உண்டு பெருத்து அடங்காப் பசியோடு
என் அடுத்தடுத்த நொடிகளை
ருசித்திட இருக்கும்
நம் காதலின் நினைவுகளுக்காகவே
விரும்பியே எதிர்ப்பார்க்கிறேன் மரணத்தை...
உடல் விட்டுப் போன உயிர்
திரும்பிடாத பிணமாகத் தான் வாழ்கிறேன்...
என் சரீரம் நீ விட்டுப் போனதிலிருந்து,
உணர்ச்சியின்றி, மகிழ்ச்சியின்றி
திரியும் என்னைப் பார்த்து தான்
நடைபினமென்னும் வார்த்தை உண்டானதோ...
நான் படும் வலிகள் யாவும் உனக்கும்
உண்டென்று தானடி என்னிதயம் வலிக்கிறது...
உன்னைக் கலங்கிட விடாமல்
உன் தலைகோதி
தனிமை உனையண்டாது விரட்டியடிக்க,,
உன்னையறிந்த நான் உன்னருகில்
இல்லையென்ற ஏக்கத்துடன்,
நொடிக கணத்திலும் பிரிவென்னும் இருளில்
உன் நினைவுத் தீ கொழுந்துவிட்டு எரிய
இதயம் மெழுகாய் உருகி
வாழ்கிறேன் கண்களில் கண்ணீரோடு ...
Friday, 10 December 2010
உந்தன் நினைவு
Thursday, 9 December 2010
முத்தம்
Tuesday, 7 December 2010
நிம்மதி
சேலை
சிக்கனம்
தெரியவில்லையா
வலி
காரணம்
அழுகை
மோட்சம்
பார்வை
காதல்
முத்தம்
கண்ணீர் சுவடு
நிஜம் தூங்கிடும் பொழுதுநிழல் மெல்ல எட்டிப் பார்க்கிறது..
நிஜ உலகின் நிதர்சன உண்மைகள்
நினைவுகளாய் என்னில் கனவுகளாய்
நிஜமாய்க் காட்டிடுது உறக்கம்...
நித்தமும் உன் மடி படுத்துறங்க,
நிலையாய் உன் காதல் அடிமையாய்,
நிழலாய் உன் அணைப்பில் வாழ,
நிமிடங்கள் உன்னருகில் வரங்களாய்,
நிறம் மாறிடாத உன் புன்னகையாய்,
நீட்டிக்க விரும்பிடும் தனிமைகளும்,
நிம்மதி பெருமூச்சிடும் உன்னிதயமும்,
நித்தமும் இப்படி இம்சிக்கும்
நின் நினைவுகள் என எண்ணுகையில்,
நிதர்சன உண்மையாய் உணர்த்திடுதே,
நித்தம் காலை எழுகையில்
நிரந்தரமாய் கண்ணோரம் கண்ணீர் சுவடு...
கவிதை
பெயர்
நீயில்லா நான்
ஏமாற்றம்
பாவம்
வெட்கம்
எதிர்பார்ப்பு
எதிர்பார்க்கும் பொருளை
எதிர்பாரா நேரம் தருவதுதான்
மகிழ்ச்சி என்பாய்...
நான் கவனிக்கா நேரம்
பின்னாலிருந்து நீ அணைப்பாய்,
கன்னத்தில் முத்தம் பதிப்பாய்.
எதிர்பாரா நேரத்தில் கிடைத்ததென
நான் மகிழ்வேனென்று...
இந்த அணைப்பும் முத்தமும்
எந்நொடியும் உன்னிடமிருந்து
எனக்கு வேண்டுமென்பதே
என் ஆசை என்று
இன்று வரை உனக்குத்
தெரியாது மறைத்த இரகிசயம்...
என் காதல்
Monday, 6 December 2010
தெரியவில்லை
சோதனை
நேசம்
அணைப்பு
காதலியின் ஏக்கம்
மோகத் தீ
தடை
மழை நண்பன்
விதிவிலக்கா
இப்படியே குடைக்குள்உன் நெருக்கத்தில்
உன் உடற்சூட்டில்
உன் நேர் பார்வையில்
உன் கதகதப்பில்
உன் நனைந்த அழகில்
உன் துவட்டலில்
உன் மேல்சிந்தும் துளியில்
உன் மழையின் இரசிப்பில்
உன் குளிரின் நடுக்கத்தில்
உன் நெருக்க மூச்சில்
உன் பூனை நடையில்
நிமிடங்களை நகர்த்த
எத்தனிக்கும் வேளையில்
மழையும் நின்று போனதே...
எந்தக் காதலன் தான்.
தான் காதலிக்கும் பெண்ணின்
காதலுக்கு துணை நின்றான்
மழை மட்டும் விதி விலக்கா?
விடை
மழை
சரியான போட்டி
அப்பாவி நான்
வீதி உலா
மீசை
Friday, 3 December 2010
Thursday, 25 November 2010
நினைவு தீக்குச்சி
வாழ்ந்த நிமிடங்கள் யாவும்ஒவ்வொரு தீக் குச்சிகளாய்
என்னிதயத்தில் பத்திரமாய்...
உன் பெயர் கொண்டவளோ
உடல் வாகு, நடை உடையவளோ,
தென்றல் காற்றின் தொடுதலிலோ,
குழந்தை விரல் பற்றி நடக்கையிலோ,
நாம் வந்த பதிவை தாங்கி நிற்கும்
இடம் போகையிலோ,
இளம்பிள்ளையின் கெஞ்சல் பேச்சிலோ,
கண்ணில் குடியேறிப் போன கனவுகளிலோ,
பிடித்த பாடல் வரி பார்க்கையிலோ,
உன் அணைப்பை ஞாபகப்படுத்தும்
என் சட்டையின் இருக்கத்திலோ
அடக்க முடியா சிரிப்பின் கண்நீரிலோ,
படபடக்கும் பேச்சினில் தெறித்திடும்
எச்சில் துளியாய் மழைச் சாரலிலும்,
ஒவ்வொரு குச்சியாய் பற்றிட
காதல் நினைவுத் தீயில்
என்னிதயம் பற்றி
எரியத் தொடங்குகிறது அன்பே...
Subscribe to:
Posts (Atom)









































