Monday, 6 December 2010

விதிவிலக்கா

இப்படியே குடைக்குள்
உன் நெருக்கத்தில்
உன் உடற்சூட்டில்
உன் நேர் பார்வையில்
உன் கதகதப்பில்
உன் நனைந்த அழகில்
உன் துவட்டலில்
உன் மேல்சிந்தும் துளியில்
உன் மழையின் இரசிப்பில்
உன் குளிரின் நடுக்கத்தில்
உன் நெருக்க மூச்சில்
உன் பூனை நடையில்
நிமிடங்களை நகர்த்த
எத்தனிக்கும் வேளையில்
மழையும் நின்று போனதே...
எந்தக் காதலன் தான்.
தான் காதலிக்கும் பெண்ணின்
காதலுக்கு துணை நின்றான்
மழை மட்டும் விதி விலக்கா?

No comments:

Post a Comment