Tuesday, 7 December 2010

எதிர்பார்ப்பு


எதிர்பார்க்கும் பொருளை
எதிர்பாரா நேரம் தருவதுதான்
மகிழ்ச்சி என்பாய்...
நான் கவனிக்கா நேரம்
பின்னாலிருந்து நீ அணைப்பாய்,
கன்னத்தில் முத்தம் பதிப்பாய்.
எதிர்பாரா நேரத்தில் கிடைத்ததென
நான் மகிழ்வேனென்று...

இந்த அணைப்பும் முத்தமும்
எந்நொடியும் உன்னிடமிருந்து
எனக்கு வேண்டுமென்பதே
என் ஆசை என்று
இன்று வரை உனக்குத்
தெரியாது மறைத்த இரகிசயம்...

No comments:

Post a Comment