Monday, 6 December 2010

விடை

படபடவென பெய்திட்ட
மழையும் சட்டென
நின்று போனது உடனே...
உன்னை நனைத்து மோட்சம்
பெற்றிட முடியா ஏக்கத்திலா?
குடைக்குள் இருக்கும் நம்
நெருக்கத்தைப் பார்த்த வெட்கத்திலா?
தான் தீண்டக் கிடைக்கா
உன் தேக அணைப்பு
எனக்குக் கிடைத்த பொறாமையிலா?

விடை?????????

No comments:

Post a Comment