Wednesday, 28 September 2011

கற்கண்டு சாரலின்
இனிப்பில் நனைந்திட
மழையின் இரசிகன் நான்...

தாயின் உச்சி முகர்ந்த
முதல் முத்தமாய்
மீண்டும் பெறும்
மழையின் குழந்தையாய்
பிறப்பெடுப்பேன்...

தரையின் தேங்கிய
நீரில் தானும் விழுகையில்
நீர்க்குமிழ்கள் பிறப்பெடுக்கையில்
கூடவே அதனை ரசிக்க
உருமாற்றம் மழலையாய்...

ஒவ்வொரு முறையும்
கழிவுகள் அழித்து
புதிதாகும் பாதையை
மாறிடக் கேட்கும் மனம்
மழையில் நனைகையில்...

துளி துளியாய்
கோர்க்கும் வார்த்தைச் சாரலில்
கால் நனைக்கும் வாக்கியங்களில்
நானும் சங்கமித்து நனைகிறேன்
ஒரு குழந்தையின் சிரிபோடு...

Tuesday, 20 September 2011

பழக்கம்

வெந்நீர் ஊற்றி
பயிர் வளர்க்கும் பழக்கம்

எங்குமே இல்லையாமடி

நீ மட்டும் சொல்கிறாய்
கண்ணீரில் வளர்க்கும் காதலை...

கரையாத உன்னிதயம்

விடியாத நீண்ட இரவுகளோடு
தினம் தினம்
மல்லுக்கட்டிக் கொண்டே
நகரும் எந்தன்
உறக்கமற்ற நாட்கள்...

காதோரம் காதல் மொழியில்
எனைக் கிறங்கடித்த
ரகசியப் பேச்சும்...

வாஞ்சையான சிரிப்பை
காணும் போதெல்லாம்,
தமக்கே சொந்தமாகாதவென
கண்களோடு இதயமும் கெஞ்சும்...

மௌனம் கூறும்
வார்த்தைகளின் ரணம்
வலி தாங்கா இதயத்தை
சிறுகச் சிறுக
செல்லரிக்கச் செய்திடும்...

எறும்பு ஊரக்
கல்லும் கரைகையில்,
நாட்களும் கரைய
கரையாத உன்னிதயம்
கல்லைவிட கடினமோ...

விடை தெரியாது புலம்பிடும்
என்னிதயம் என்ன விசனமோ...

அர்த்தமின்றி தவிக்கும் காதல்

இதுவரை
ஓசையே கேட்டிராத செவியினுள்
உரக்க கதறி
அழுகும் ஓசையாய்...

பார்வை கண்டிரா
விழிமுன் கண்ணீரும்..

பாலையில்
ஏர்பூட்டிடும் விவசாயமாய்...

உணர்ச்சியில்லா
மரப்பாச்சி பொம்மையிடம்
சொல்லியதைப் போல்

என் காதலும்
அர்த்தமின்றி தவிக்கிறதே..

பெண் நட்பு

ரகசியம் பரிமாறிய பொழுதுகளிலும்,
சிநேகம் வளர்த்த அன்பிலும்,
கண்ணீர் உடையும் பிரிவுகளிலும்,
அருகருகே அமரும் நெருக்கத்திலும்,

பகிர்ந்து உண்ட வேளைகளிலும்,
உடன்பிறப்பாய் செய்திடும் உதவிகளிலும்
தோல்வியில் கைதந்த நேரத்திலும்
ஆறுதலான தோள் சாயல்களிலும்

உரிமையில் பிறப்பெடுக்கும் கோபத்திலும்,
காதுமடல் திருகும் கண்டிப்பிலும்,
ஒளிவு மறைவிற்கான சண்டைகளிலும்
எதையும் செய்திடும் நட்பிலும்

தோள்களில் சாயும் தோழமையிலும்
தோழி சகோதரியாகும் வேளையிலும்
கண்ணீர் துடைக்கும் விரலிலும்
பாலுனர்வின்றி இருந்த தனிமைகளிலும்

வலியை உணர்த்திய பிரிவிலும்
இறுக கரம்பற்றிய ரகசியங்களிலும்
உணர்ந்த உன்னத நட்பு

நட்பறியா குருடர்கள் பார்வையிலும்
புறம்பேசும் புத்திமான்களின் பேச்சிலும்
சங்கடப் பட்டு வெளியே
எட்டிப்பார்க்க வேதனையோடு இன்று....

Monday, 19 September 2011

அலங்காரம்

என்ன இவ்வளவு நேரம்
நிற்கிறாய் எனக் கேட்கையில்,
சாமிக்கு அலங்காரம்
நடக்கிறதாம் என்றாய்..
அடி அழகி
உன்னை நிற்க வைத்ததே
உன்னைப் பார்த்து
அலங்காரம் செய்திடத் தானே...

கோவில் நடை

ஒன்பது மணிக்குத் தான்
கோவிலில் நடை சாத்தப்படுமாம்...
எனக்கோ கோவிலை விட்டு
நீ வெளியேறியதுமே
சாத்தப்பட்டுவிட்டது...

குங்குமம்

நெற்றியில்
குங்குமம் வைத்திடுகையில்
மேலும் சிவந்து போகிறது
உனது நிறத்தில்...

பொறி

குளக்கரையில் அமர்ந்து
மீன்களுக்கு நீ
பொரி போடுகையில் தாண்டி
கயல்விழியால்
நீ எனக்கு வைத்த
பொறி புலப்பட்டது...

பொறாமை

சிற்ப்பங்களின்
அழகைக் கண்டு
நீ ரசிக்கையில்,
உனதழகில் மயங்கி
பொறாமையில் சிறுத்துப்
கறுத்தே விட்டது...

ஆராதனை

அர்ச்சகர்
தீபத்தட்டை நீட்டுகையில்
உன்னை தான்
தேவதை என்றெண்ணி
ஆராதனை செய்வதாய்
ஒரு பிரம்மை...

தரிசனம்

கோவிலை விட்டு
வெளியேறுகையில்,
சாமியின் தரிசனம் கண்ட
மகிழ்ச்சியில் நீ.
உன் அழகினை
அருகாமையில் கண்ட
சந்தோசத்தில் நான்...

அழகு - ரசனை - நீ...

நீ பிரகாரத்தில்
ஒவ்வொரு சிற்பமாய்
பார்த்து ரசிக்க - நானோ
நீ ரசிக்கும் அழகில்
சொக்கிப் போனேனடி...

தந்தையும், தாயும்...

மூளை தகப்பனாய்
இதயம் தாயாய்.

உத்தரவு மட்டுமே
இடத்தெரிந்த மூளைக்கு,
உணர்வுகள் புரிவதில்லை
தாயைப்போல்...

நீ வாழ என்றால்
உன்னில் விலகிப் போன
அவளை மறந்து,
நினைவுகளைத் துறந்துவிட
என உத்தரவு தந்தையிடம்...

நீ வாழவேண்டுமென்றால்
அவள் நினைவோடு வாழ் என
எனை உணர்ந்து கூறுகிறது
என் நிலை அறிந்த தாய்...

உன்னைப் பற்றி கவிதை எழுத

உன்னைப் பற்றி
கவிதை எழுத தோன்றிட,
எதைப் பற்றி எழுதுவதென
எனது எண்ணச் சாலையில்
சற்று பின்னோக்கி செலுத்தப்பட்டது
நம் காதல் பேருந்து...

தனியான பயணத்தில்
நீ துணையாக வந்ததில் தொடங்கி,
அழகு, காதல், கோபம்,
சண்டைகள், கண்ணீர், பிரிவு என
ஒவ்வொரு நிறுத்தமாய்
நின்று ரசித்தது மனது....

சில நிறுத்தங்களில் சிரிப்பும்
சில நிறுத்தங்களில் வெட்கமும்
சிலதுகளில் அசடும் வழிந்தபடியே
மெல்ல ஊர்ந்து போகிறது...

மீண்டும் ஒரு காதல்
மீண்டும் அந்த இன்பம்
மீண்டும் ஒரு பிறப்பாய்
சந்தோஷ ஊற்று என்னுள்...

பயணத்தின் போதே
இறுதியும் முடிவு செய்யப்படுகிறது...
இறங்குமிடம் வருகையில்
மீண்டும் வாழ்ந்த வாழ்க்கையின்
திளைப்பிலும் லேசான கண்ணீரிலும்
முற்றுப் புள்ளி வைத்தேன்
கவிதை எழுதும் எண்ணத்திற்கு...

இக்கவிதையோடு நம் காதல்
என்னை விட்டு நீங்காமல்
இன்னும் பலமுறை
இப்படியே என்னுள் ஓடிட...

என் கவிதை, அவள் கண்ணீர்

எனது கவிதையை படித்திருந்தால்
என்னை விடாது மீண்டும்
என்னையே சேர்ந்திருப்பாலாம்
சொல்கிறார்கள் என் நண்பர்கள்...

என் சோகம் வலியாவும்
வரிகளாய் படித்தால்
கலங்கி கண்ணீர் விட்டிடுவாள்...

காதலித்த நாட்களிலே அவளது
கண்ணீர் பார்க்கா என் மனம்,
இப்பொழுது மட்டும் பார்த்திடுமா
என் வரிகள் அதனை செய்திடுமா...

Friday, 16 September 2011

இடைவெளி இல்லா நெடுந்தொடர்

தொலைகாட்சி பார்க்கும் பழக்கம்
இல்லையாடி உனக்கு...

பார்க்கும் பழக்கம்
இருந்திருந்தால் தான்
இடைவெளி பற்றி தெரிந்திருப்பாய்...

இடைவெளியே இல்லாமல்
என்னை மூவாறு மணியும்
பாடாய் படுத்தும்
உன் நினைவுகளுக்கு
இடைவெளி விட்டிருப்பாயே
காதல் நெடுந்தொடரில்...

காதலில் விழுந்த நான்...

தனியாய் வாழும்
எறும்பாய்
தரையில் மிதக்கும்
மீனாய்
பிறை இல்லா
நிலவாய்,
பொம்மை விரும்ப
குழந்தையாய்,
விடிய மறுக்கும்
இரவாய்,
பொன் பிடிக்க
பெண்ணாய்,
மரம் மறுக்கும்
குரங்காய்,
இரை விரும்பாத
விலங்காய்,
சோகம் தொலைத்த
கண்ணீராய்,
இவற்றுள் மனித இயல்பில்
தடம் மாறி பயணிக்கும்
காதலில் விழுந்த நான்


காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் மனிதநேயம்...

பச்சை தண்ணீருக்கும்
விலை சொல்லிடுகையில்
மனிதனின் மனதில்
எங்கே பார்த்திட
இரக்கமென்னும் நீரை...

மனிதன் இயக்கி வந்த
காலம் புதைந்து - இன்று
மனிதனை இயக்கும்
இயந்திரங்கள்...

கேட்டால் போட்டி உலகம்.
மனிதம் மறந்து,
நியாயம் புதைத்து,
அதன் மேல் ஓடி
வெற்றிக் கொடி நாட்ட,
யாருண்டு பாராட்ட...

கிராம் கணக்கில்
உதவி எதிர்பார்த்திட,
தங்கம் அளவு விலை....

அக்றினை யாவும்
பிறந்த பலனாய் உதவிட,
மனிதன் மட்டும்
ஏனோ மறந்துபோனான்
மனிதம் செய்திட...

பணம் காசு சேர்ப்பதோடு
நாலு நல்ல மனங்களையும்
சேர்த்து வையுங்கள் பத்திரமாய்...

பணத்திற்கு தரும் மதிப்பை
மனதிற்கும் கொடுத்து.
முடிவில் சேருமிடம்
கொண்டு செல்ல வேண்டி...

சின்னதாய் வேண்டுகோள்...
அழிந்து போன பட்டியலில்
மனித நேயத்தையும்
சேர்த்து விடாதீர்கள்...

Friday, 9 September 2011

வேடம்

இதழுக்கு மட்டுமே
இரு வேடம்...
சிரிக்கையில்
புன்முறுவலிலும்,
வலியின் முனங்களின்
மருவலிக்கவும்...

முதுமை

கேட்பாரற்று கிடப்பது
காலம் கசக்கிப் போட்ட
உடல் மட்டுமில்லை,
அரை நூற்றாண்டு
அனுபவும் தான்...

கோலம்

நீ அரிசி மாவில் கோலமிடுவது
எறும்புகளுக்குஉணவிடத் தான் என்றாலும்,
தினம் தினம் உன் தரிசனத்தை
உணவாய்க் கொள்ளும் எனக்காகவும் என
உனக்குத் தெரிய வாய்ப்பில்லை...

Monday, 29 August 2011

அனாதையாய் சுற்றித் திரியும் வாழ்க்கை

உன்னோடு சேர்ந்து
வாழ நினைத்த
வாழ்க்கை நிமிடங்கள் யாவும்
அனாதையாகத் தான்
சுற்றித் திரிகிறது...

புன்னகைப் பொய் வேடமிட்ட
எந்தன் பகல் வேளை நொடிகள்,
அரிதாரம் களைத்து,
நிஜ முகத்தில்
உப்பு கரித்த கன்னத்தோடு..

நாம் சந்தித்துக் கொண்ட
சமயங்களை மிகச் சரியாய்
நினைவு படுத்தி சுழற்றுகிறது
தோலுரிக்கும் சாட்டையினை
எந்தன் மனம் உரிக்க...

நெற்றிப் பொட்டில் வைக்கப்பட்ட
துப்பாக்கி முனையில்,
கழிகிறது வாழ்நாட்கள்,
பட படப்பிலும்
கண்ணீரில் வெளியேறும்
உயிரின் பரிதவிப்பிலும்...

உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள்

உன்னோடு
நான் வாழ்ந்த காலங்கள்,
விடியாத இரவாய்
நீண்டு கொண்டே தான் இருக்கிறது...

பனி கொண்ட இலையாய்
உன் உமிழ் நீர் கண்ட
கன்னங்களின்
சொந்தக்காரனாய்
சிறு கர்வம்...

ஏழைக்கு கிடைத்த
பொன் முட்டையிடும் வாத்தாய்
என் ஒவ்வொரு நாளும்
உன் புன்னகையில்
செழித்து வளர்ந்த நாட்கள்...

உப்புக்கும் வைரத்திற்கும்
வித்தியாசம் அறியாதவனிடம்
சிக்கிய வைரமாய்
உன் உண்மைக் காதல்...

உன் கன்னம்
பிய்த்து தின்று பசியாறி,
வருடல்களில் தொடங்கி
முத்த வார்ப்புகளில்
முடிந்த நாளிகைகள்...

உன் தெற்றுப்பல் சிரிப்பிற்காக
எண்பது வயதில் நீ சிரிக்கும்
பொக்கை வாய் சிரிப்பை
சிரித்துக் காட்டிட,
உன் சிரிப்பு அடங்க
ஆகிடும் நிமிடங்கள்...

உன்னுடன் கழிந்த
எனக்கான வாழ்க்கை யாவும்
கடலில் சேர்ந்த நதியாய்
உப்புக் கரித்தாலும்,
உயிர் வாழும் மீனாக
நீந்திக் கொண்டிருக்கிறது
மீதமுள்ள வாழ்க்கை...

மடிக்கப்படும் போர்வை

அர்த்த ராத்திரியில்
அர்த்தமற்ற நினைவுகள் வியாப்பிக்க,
வியர்வைப் பூக்கள்
மெல்ல எட்டிப் பார்க்கும்...

நொடி முள்ளின்
கட்டாய புரந்தள்ளல்களில்
வெறுமையோடு
நகரும் நிமிடங்கள்...

கண்கள் இறுக
மூடிப் படுத்தாலும்,
வெற்று திசையில்
நிலை குத்தும் பார்வை...

வடிந்து போகும் வடிகாலும்
தலை அமிழ்த்தி
மூழ்கிக் கிடக்கும்
கண்ணீரில்...

என் தூக்கமற்ற
இரவின் அடையாளமாய்
உடலின் அசைவுகளில்,
புரண்ட தடயங்களில்,
கசங்கிப் போன போர்வை
மடிக்கப்படுகிறது
என் மறுநாளுக்கான
உறக்கத்திற்கு...

Saturday, 27 August 2011

கண்டுகொண்டது காதல்

எதிர்பார்க்கும் பொழுதெல்லாம்
தேவையற்றுப் போய்,
பின் எதிர்பாரா நேரம்
கண்ணீரில் அமிழ்த்தும்
உந்தன் அழைப்புகளிலும்...

நெருங்கி கன்னம் கவ்விட
வரும் வேளைகளில் விலகி,
பின் நீயெனக்குத் தரும்
முத்தங்களிலும்...

வெறிச்சோடிய பொழுதுகளில்
நொடிகள் கடத்த,
அழைப்பின்றி கிறுக்கிடும்
உன் பெயர்களிலும்,

இரண்டு மணி நேரம்
உடனிருந்தது எல்லாம்
என் காதல் பசிக்குப்
போதவில்லை என
கிளம்பிடும் முன்
தலை திருப்பல்களிலும்...

எனக்கான உன் காதல்
பிரதிபலித்த அழகை
கண்டுவிட்டது அன்பே
சந்தோசக் கண்ணீரில்
நம் காதல்....

Friday, 26 August 2011

கனவுப் பட்டறை

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கனவாய்
உற்பத்தி செய்திடும்
அந்தப் பட்டறை...

கூரான கனவுகளால்
தினம் தினம் என்னை
பதம் பார்த்துச் செல்லும்...

அதன் நினைவை
கண்கள் ஓரம்
கண்ணீர் தடம்
விடுத்துச் செல்லும்...

என்னுயிர் பருகிட
புதுப் புது உருவில்,
என் காதலியாய்,
நெருங்கி அமர்ந்திடும் வேளையாய்,
தாலி கட்டிடும் தருணமாய்,
வாரிசு தந்திடும்
பிறப்பின் நேரமாய்,
ஒவ்வொரு அரிதாரம் கொண்டு
என்னை மயக்கும்...

நிரந்தரமில்லை
எனத் தெரிந்தும்
நிஜமாகத் தோன்றும்...

சில நேரம்
நிஜமாகிப் போனதாய்
மதி மயக்கும்...

என்னோடு
நீ இருந்த பொழுது
தலையில் வைத்து
கொண்டாடி,

இன்று ஏன் வரவில்லை என
உரிமைக் கேள்வி தொடுத்த
கனவுகளை,

நீயற்ற நாட்களில்
இரவின் பிடியில் சிக்கிடுகையில்
தற்கொலை செய்யக் கேட்கிறேன்...

சில நேரம்
கனவுகளை கொலை செய்ய
தைரியமும் இன்றி,
கனவுகள் தரும்
வலிகளைத் தடுக்கும்
வழி தெரிந்திடாமல்,
உறக்கமற்ற
இரவினைத் தேடுகிறேன்...

வாழ்க்கை

மரணமென்னும்
வெற்றிக் கோப்பை பெற
நடக்கும் மராத்தான் போட்டி...

கேள்விகள்

கேள்விகள் தான்
சாவிகலாம் - ஆனால்
உன்னிடம் கேட்டும்
திறக்கப் படா
உன் மனம்,,,

ஏமாறும் என் இதயம்...

ஆலமரம் சுற்றி வந்து
அடிவாயிற்றை
தொட்டுப் பார்க்கும்
பெண்ணின் நிலை தானடி,
உன் அழைப்பை
எதிர் பார்த்து ஏமாறும்
என் இதயம்...

அலாரம்

நீயில்லா நேரத்தில்
உறங்கிக் கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு அலாரமே
உன் வலையலோசையும்
கொலுசொலியும் தாண்டி...

அவுட் ஆப் கவரேஜ்

உன் தொடர்பின்றி
சோகமென்னும்
அவுட் ஆப் கவரேஜில்
இருந்த என் மனம்,
உன் ஒரு மிஸ் காலில்
சந்தோசக் கவரேஜுக்கு
வருவதெப்படி....

சுகமெனக்கு...

ஓராயிரம்
இன்கம்மிங் கால்கள்
சுகமில்லை எனக்கு..
கண்மணியின்
ஒரு மிஸ் கால் போல்...

மிஸ் கால்

உன் எண்ணில் இருந்து வந்த
ஒரு மிஸ் காலில் தான்
மிஸ் ஆகாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என் காதல்...

காண்கரீட் காடுகள்

விளை நிலங்களில்
உரமிட்டு பயிர் வளர்த்த
காலம் போய்,
பணமிட்டு வளர்க்கிறார்கள்
காண்கரீட் காடுகளை...

வேதனை கொடுமையடி...

உறக்கம் தவிர்க்கும்
பழக்கம் கேட்கிறேன்..
பகலின் நீயின்றி வாழும்
வேதனையை விட,
கனவில் உன்னுடன்
சேர்ந்து வாழ்ந்து,
விடிந்ததும் பிரியும்
வேதனை கொடுமையடி...

துறக்க முடியாத விரக்தியில்...

நாமிருவரும்
ஒன்றாய் இருந்த இடங்களுக்கு
செல்ல மறுக்கிறேன்.

நம் காதல் நினைவில்
மூழ்கி, மூச்சிரைத்து இதயம்
உயிர் துறப்பதைத் தவிர்க்க..

நீ என்னுடன்
ஒன்றாய் பயணித்த
வாழ்க்கையை துறக்க முடியாத
விரக்தியில்...

உன் மௌனத்தில்

இரண்டடி தூரத்தில்
நீ இருந்தும்
எங்கோ தொலைவாய்.
உன் மௌனத்தில்...

Tuesday, 23 August 2011

உனக்கான என் காதல்....

சுவற்றின் புள்ளியிலே
வெறிச்சோடிப் போன
என் பார்வைகள்...

சில நொடி மகிழ்ச்சிக்கு
ஏங்கி ஏங்கி விரக்தியில்
வெறுத்துப் போன மனம்...

தகித்துப் போன
உந்தன் பார்வையில்
வியர்வையாய் வெளியேறிய
எந்தன் தைரியம்....

ஒவ்வொரு முகமாய்
தன் தாய் தேடும் பறவையாய்,
உன் வருகை காணும்
என் நாட்கள்....

உன் நினைவுகள்
தின்று தீர்த்தத்தில் மிச்சமாய்,
உருவமற்று கிடக்கும்
உனக்கான என் காதல்....

திருப்பப் படும் இரவுகள்

இரவின் மையூற்றி
எழுதப்படும் இரவுகள்,
பெரும்பாலும்
படிக்கப்படாமலே
திருப்பப் படுகிறது
விடியலில்...

Tuesday, 2 August 2011

நான் - என் காதலில்

முரண்பட்ட அந்தி இரவு முழிப்பு,
உண்ணாவிரதம் இருக்கும் பசி,
கவிதையாகும் கிறுக்கல்கள்,
இடைவெளி இல்லாத நினைவு
அதில் பனிக்கட்டியாய் கரையும் நேரம்,
விரும்பி ஏற்கும் தனிமை,
நிழலும் துணை இல்லா
இடத்திலும் தனியாய் சிரிப்பு,
காணத் துடிக்கும் முகம்,
சொல்லிடத் துடிக்கும் காதல்
கண்டுவிட்டால் தொண்டைக்குழியில் சிக்கிடும்,
என் நிலையும் மறந்து
உன்னை பற்றி ஓடும் காட்சி,
உனக்குப் பிடித்தவைகள்
எனக்கும் பிடித்தவையாய் இடமாற்றம்,
கண்டிடும் பெண்டிரும் உன் சாயலில்,
உறக்கங்களை பட்டா எழுதிக்கொண்ட
உன் நினைவுகளுடன்,
தேர்தலின் தோற்ற வேட்பாளரை
எந்தன் நிஜங்கள்...

முத்தச் சுவை

நான் முத்தம் தந்த கன்னத்தை
உடனே துடைத்துவிட்டாள்...
என்னவென்று கேட்கையில்
உன் எச்சிலின் சுவை
எறும்பு, தேனிக்கு இல்லை,
எனக்கு மட்டுமே சொந்தமென
மறு கன்னம் காட்டினாள்....
சரி எதற்கு வீண் செய்ய என்று
காட்டிய கன்னம் புறம்தள்ளி
இதழ் பற்றினேன்..
அவள் மட்டுமே சுவைத்திட...

கன்னப் பூ

என் கன்னமும்
மலராகிப் போனதடி,
தேனிக்களும் தேடிடும்
உன் முத்த எச்சில் பட்டதால்...

தாகம்

தாகம் குறைக்க
தண்ணீர் பருகலாம்.
இங்கோ என் விழியால்
காதல் நீர்வீழ்ச்சி
உன்னை அப்படியே பருகினாலும்
அடங்க மறுக்கிறது
என் காதல் தாகம்...

ஊற்று

கர்வத்தோடு
தேடிக் கொண்டிருக்கிறேன்
ஆயுள் முழுவதும்
குறையாத ஊற்றை...
என்னுள் ஊறும்
அவளது நினைவு ஊற்றைப் போல...

அராஜகம் செய்திடும் நினைவுகள்

நேரம் காலம் தெரிந்திடாமல்
அனுமதியின்றி உள்ளே வந்து,
அராஜகம் செய்திடும் உந்தன்
மௌனப் போராட்டத்தில்,
உன் நிஜமற்ற நினைவுகளால்
அடிக்கடி வெளியேற்றப்படும்
என் நிஜங்கள்...

என்றும் உன் நினைவுகளுடன்

எத்தனை முறை எச்சிலில்
கன்னம் நனையத் தந்தாலும்
மீண்டும் மீண்டும்
கெஞ்சிக் கேட்கிறது இதயம்...

என் கேசம் களைத்து
விளையாடும் உரிமை
உனக்கு மட்டுமே என
மாற்றிக் கொண்டாய்...

கண்கள் மூடி
கண்ணடித்து இதயம்
கொள்ளை இடுகையில்,
காவல் நிலையம் சென்று
புகார் தரவும் மனமில்லை...

தனியே விட்டுச் செல்கையில்
கண்ணில் பனிக்கும் கண்ணீரில்
இதயம் கனத்துப் போகிறது...

உணவூட்டும் வேளையில்
பற்களில் சிக்கிய
விரல் கடித்து சிரிக்கையில்,
வலி மாறி சுகம் தானெனக்கு...

உன் உதட்டில் வழியும்
பருக்கையின் வருகை கேட்கும்
எந்தன் நாவும்...

மனம் சில நேரம்
தடம் மாறிப் போகையில்...
உன் நினைவுகள் நிலையாக்கி
ஒருவழிப் படுத்துகிறது...

அரைகுறை ஆடையணிந்து
உன் கொள்ளை அழகை
பார்த்து ரசிக்க அடிக்கடி
மனம் ஏங்குகிறது...

உன் விரல் பிடித்தே
நகர்வலம் வந்திடவும்
எந்நேரமும் தயாராக
எந்தன் பாதைகள்...

உன்னைப் பற்றி
சொல்லிட வேண்டுமாயின்
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிகளும்
வரிகளாய் மாறிக்கொண்டே
தானிருக்கும்...

என்றும் உன் நினைவுகளுடன்
உன் தந்தை....

கண்ணீர்

நீயென்னை
தனியே விடுத்துச் சென்றதும்
என் நிலை கண்டு,
நான் உயிரோடு வாழ்வதை
உலகிற்கு உணர்த்தியது
என் கண்ணீர்...

பொம்மையாகிப் போகிறேன்...

உனக்குப் பிடித்த
பொம்மையாகிப் போகிறேன் அன்பே...
தனிமையில் இருக்கும் நேரம்
உன் கரம் பட்டு உயிர்த்தெழுந்து
காதல் விளையாட்டு கொண்டு,
நீயில்லா நேரம்
உயிரற்றுப் போக...

கற்பூரம்

சொல்லப்போனால்
எனது ஆண்மையும்
கற்பூரம் தான்...
உன் பார்வையில்
எரிய ஆரம்பித்து
தடயம் இன்றி
எரிந்து போவதில்...

காதல் நெடுந்தொடர்

வாழ்க்கைத் தொலைக்காட்சியில்
ஓடிடும் என் காதலும்
கிட்டத்தட்ட நெடுந்தொடர் தான்...
முடிவே தெரியாமல்
நாட்கள் ஓடிக்கொண்டிருக்க,
கண்ணீர் மட்டும்
உறுதியாய் தினம் தினம்...

Friday, 29 July 2011

காதல் கோட்டை

காகிதத்தில்
கோட்டை கட்டினேன் என்றால்
சிரிக்கிறார்கள்...
என் காதலை
காகிதத்தில் எழுதி தானே
காதல் கோட்டையை
கட்டினேன் எனத் தெரியாமல்...

என்னடி கொடுத்தாய்

என்னுடன் இருந்து
கிளம்புகையில்
முத்தம் தருவாயடி,
மறுமுறை சந்திக்கும் வரை
நினைவு வேண்டுமென்று...
இப்படி ஒட்டுமொத்தமாய்
என்னைப் பிரிய
என்னடி கொடுத்தாய்...

சுனை

வற்றிடும் சுனையினை
யாரும் கேட்பதில்லை,
என் கண்ணின் சுனை
கண்ணீர் வற்ற வேண்டிடும்
என்னைப் போல...

உறக்கம்

நீ அங்கு விளக்கணைத்து
சுகமாய் உறங்கிட,
இங்கோ எனது
உறக்கம் அணைத்தது,
எரிய ஆரம்பிக்கிறது
உந்தன் நினைவு...

காற்று

மூச்சு முட்டிட
இறுக்க பற்றிய அணைப்பில்,
ரொம்பவே
திணறித் தாண்டி போனது
காற்றும்...

இதயம்

இருக்க பிடித்தபடி
என்பின்னால் நீ அமர்ந்து,
முன்னால் நான் வண்டி ஓட்ட,
என் இதயம் மட்டும்
பின் திரும்பி,
உன் இதயத்திடம் தனியே
காதல் கொஞ்சுகிரதடி...

நீயற்ற வாழ்நாள்

மலை ஏறும்
முதியவனாய்
செயலற்று ஊருகிறது
என் நெஞ்சம்,
நீ அற்ற மீதமுள்ள
வாழ்நாளைக் கழிக்க...

பொக்கிஷம்

நீ தூக்கி எறிந்த
பொருட்கள் எல்லாம்
பொக்கிசமாய் என்னிடம்...
அந்த வரிசையில்
அன்பும் காதலும் மட்டுமே
நிறைந்த என் இதயம்
வருங்கால துணைவிக்கு...

பெயர்

என பெயர் சொல்லி அழைக்க
ஆயிரம் பேர் உண்டடி...
பெற்றவருக்கு பிறகு
எனக்கென பெயர் வைத்த
அழைக்க நீ மட்டுமே...

முத்தம்

ஓரே ஒரு முத்தம் கேட்டிட
விறைப்பாய் முறைத்தாய்...
ஏன் மறுக்கிறாள் என
எண்ணிய என்னிடம்,
முத்தத்தில் என்னடா
ஒருமை பன்மை என்று
மொத்தமாய்
கொட்டித் தீர்த்தாள்
முத்த மழையை...

ஆதி.. அந்தம்

ஆதி என்றால்
அந்தம் நிச்சயம்...
விடாமல் துரத்தும்
உன் நினைவுகளுக்கு மட்டும்
ஏனடி முடிவின்றி
நீளுகிறது...

உன் வருகை தேடி

திருவிழாவில்
கடை விரித்து
ஒன்றுமே விற்காமல்
ஏமாற்றம் கொண்ட
வியாபாரியாய்,
உன் வருகை தேடி
ஓய்ந்து போன நான்...

கண்ணீர்

உன் வருகை காண
அங்கும் இங்கும் அலைந்து
ஏமாந்து, களைத்து,
வியர்வையாய் வெளியேற்றுகிறது
கண்ணீர்...

அப்பா..

எனது அசல்.
முதல் நாயகன்.
டா சொல்லா தோழன்.
வாழ்க்கை கற்பித்த ஆசான்.
கண்டிப்பு காட்டும் தாய்.
பாசம் மறைக்கும் நடிகன்.
தன்னம்பிக்கை தந்த விதை.
வளர்ச்சிக்கு உரமிட்ட உழைப்பாளி.
அனுபவ நிழல் தரும் ஆலமரம்.
முகத்தின் நேரில் திட்டி
முதுகின் பின்னால் பாராட்டும் விமர்சகன்.
தாய் பாசத்தில் கண்டுக்கப்படா பொக்கிஷம்.

சுயநலக்காரி

நீயும் ஒரு
சுயநலக்காரி தான் தாயே..
உன் உயிர் தந்து,
அன்பும், இரக்கமும்
மட்டும்
உன்னளவு
முழுமையாய் தந்திடாமல்...

Thursday, 28 July 2011

என்ன செய்ய

உன்னை ஞாபகப் படுத்தும்
ஒவ்வொன்றிலும் இருந்து
விலகி இருந்து
மறக்கச் சொல்கிறார்கள்...
உன்னையே எண்ணி
நொடிகளாய் துடிக்கும்
என் இதயத்தை
என்ன செய்திட...

வண்ணத்துப்பூச்சி என நம்பி..

அங்கே பாரடி
பூக்கள் யாவும்
ஆர்வமாய் தேன் தர
பூத்திருக்க - உன்னை
வண்ணத்துப் பூச்சியென நம்பி...
உனது கண்ணிமையின் படபடப்பில்...

காதல்

ஒவ்வொரு முறையிலான
ஓரப் பார்வையில்
என்னுயிர் வெளியேற்ற...

என் உடல் நீ கடந்து
என்னருகில் நடக்கையில்,
என்னுயிர் உடல் விலகி
உன்னுடன் நடை பழக...

தட்டில் சோறிட்டும்,
வயிற்ருக்கு தண்ணி காட்டி
உன் நினைவில்
விரல்கள் கோலமிட,

படுக்கை விரித்து
தூங்க ஒத்திகை காட்டி
உறக்கத்தை ஏமாற்ற...

எதிரே நீ வர
தைரியமாய் நானும்,
கனவில் மட்டும்
சிரித்து பேச...

தெனாவட்டும்
துடுக்குப் பேச்சும்
உன்னிடம் மட்டும்
வாலைச் சுருட்ட...

தனிமையின் எதிரி
இன்று ரசிகனாய்...

நிஜமில்லை எனத் தெரிந்தும்
நினைவுகளோடு நேசம்...

உன் பெயர் கொண்ட
குழந்தையிடம் அலாதி பிரியம்...
இன்னும் சொல்லப் போனால்
மழலையின் முத்தம்
உன்னதாய் தெரியும்...

இதுவெல்லாம்
காதலின் அடையாளமோ...
இல்லை என் இதயத்தை
உரிமை கொண்டதற்கு
நீ தரும் பட்டா பத்திரமா....

தினம் தினம்
உன் ஓரப் பார்வையில்
கல்லூன்றி செல்லடி...
என் இதயத்தை
வேலிட்டுக் காக்கிறேன்
உன் காதல் காலடி
என் மீது படுவதற்கு...

என்னை மன்னித்துவிடு அன்பே..

என்னை மன்னித்துவிடு..

மூன்று நேரமும்
உணவருந்தச் சொல்வாய்
நேரத்திற்கு - இன்றோ
பசியினை மட்டும்
உணவாய்க் கொண்டிருக்கிறது
எந்தன் வயிறு...

என்னை மன்னித்துவிடு..

இரண்டு விரலில்
பணத்தை கொடுத்தால்
திட்டிவிட்டு முறைப்பாய்...
இன்றும் அப்படியே
கொடுக்கிறது விரல்கள்
உன் திட்டல்கள் வேண்டி...

என்னை மன்னித்துவிடு..

நேரத்திற்கு உறக்கம்
கொள்ளச் சொல்வாய்..
இருள் பரவத் தொடங்கினாலும்
எனக்கு மட்டும்
விடியலாய் விழிப்பு...

என்னை மன்னித்துவிடு..

வெயிலில்
அலையாதே என்பாய்..
வெயிலின் சூட்டிலாவது
என்னுயிர் என்னிடம் தான்
உள்ளதென்று உரைக்கட்டுமென்று
திரிகிறேன் அன்பே....

என்னை மன்னித்துவிடு..

பிறர் பொருள்
நமக்கு எதற்கென்று
சொல்வாயடி - இன்று
உன் கணவருக்குச் சொந்தமான
உன் மீதான காதலும்,
நினைவுகளும்
என்னிடம் உள்ளதடி...

என்னை மன்னித்துவிடு..

திட்டு

என் நினைப்பே
இல்லையா எனத் திட்டிடுவாய்...
இன்று
உன் நினைவிலே வாழும்
என் இதயம் திட்டுகிறது
நீ எங்கே என்று...

என்னவென்று சொல்ல

வெகு வருடங்களுக்கு பிறகு
சந்தித்தேன் அவளை.
முதன்முதலாய்
பார்த்த அதே கோவிலில்...

அன்று பார்த்த
அதே அழகி தான்...
குடும்பச் சுமையில்
அவளது உடலும் சற்று
சுமை சேர்த்திருந்தது...

காட்சியாய் கண்கள் கண்டதும்
இதயம் பின்னோக்கி செலுத்தியது
அவளுடையதான என் நாட்களை...
மூளை உண்மையை சொல்லி
முன்னோக்கி கொண்டு வந்தது...

என்னுடைய காதலியான
உருவத்தையும்,
மாற்றான் மனைவியான
உருவத்தையும் ,
வேறுபடுத்திக் காட்டியது
நெற்றிவகிட்டுக் குங்குமமும்
தாய்மையின் சாந்தமும்...

அவளைப் பார்த்ததும்
சந்திப்புகள் தவிர்க்க
வெளியேற எத்தனித்தேன்...
அதற்கு முன் அவள்
கவனித்துவிட்டாள்...
சிறு புன்னகை பூத்தேன்
உதட்டின் வழி(லி)யால்...

தயங்கித் தயங்கி
பேச்சுக்கள் ஆரம்பித்து
சம்பிராதய விசாரிப்புகள்...
எங்களின் கற்பனையின் படியே
ஆணும் பெண்ணுமாய்
இரண்டு குழந்தைகளாம்....

மனதில் சின்னதாய்
ஒரு ஏக்கம்...
எங்கள் காதல் அவளின்
நினைவில் உள்ளதா என
தெரிந்து கொள்ள அவளது
குழந்தைகளின் பெயரைக் கேட்டேன்...

என் பெயரோ
எங்களது கற்பனைக் குழந்தையின்
பெயரோ இருக்குமென
சின்னதாய் ஆசையில்..

அமுதன், இனியாள் என்றாள்.
ஒருபுறம் சந்தோசம்.
என்னை மறந்து
சந்தோஷ வாழ்க்கை
வாழ்கிறாள் என்று...
மறுபுறம் வருத்தம்
என் ஞாபகம் இல்லையென...

அலைபேசி அழைக்க
விலகிப் போனாள்...
அமுதன் எனை நெருங்கி
மெல்ல வினவினான்...
உங்கள் பெயரும்,
என் செல்லப் பெயரான
தமிழ்' என்று...

காதலும் நட்பும்

காதலுக்கும் நட்பிற்கும்
உள்ள ஒரே ஒற்றுமை
அன்பு காட்டுதலே...
வித்தியாசம்
காதல் காட்டும் அன்பை
ஏற்றுக்கொள்ளும் நட்பிலும்,
நட்பு காட்டு அன்பை
வெறுத்திடும் காதலிலும்...

பெண் நட்பு

பிழையாய் பார்க்கும்
பிறரின் கண்ணிற்கு
புலப்படாத இடைவெளி,
எங்களுக்குள்
இடை'வேலியாய்'...

Wednesday, 27 July 2011

ஊமையின் காதல்

இன்றேனும்
உனது மௌனம்
கலையாதாவென ஏக்கம்...

வானவில்லாய் வியாப்பித்து
குதுகலம் செய்த பின்,
நிரந்தரமில்லை என
களைந்து போகும்
நியாயம் என்னடி...

தட்டுத் தடுமாறும் குழந்தையாய்
உன்னைத் தொடருகையில்,
விலகி ஓடிடும்
அவலம் ஏனடி...

உன்னைச் சுற்றியே
ஒளிபரப்பாகும்
என் நிலைவலைகள்
உனது அலைவரிசையில் மட்டும்
புலப்படவில்லையோ...

கண்ணீரின் மதிப்பு
பெண்களுக்கு காரியம்
முடியும் மட்டும்...
ஆணுக்கோ அவனது
கடைசி காரியமும்
முடியும் மட்டும்...

ஒருபோதும்
புரிவதில்லை உண்மைக் காதல்..
தொட்டிலில் உன்னை
தாலாட்ட எண்ணும்
என் மனம் தவிர்த்து,
உன்னை தொட்டில் கட்ட
வைப்பவனிடம் தானே
போகிறது உன் மனம்...

அடிப் போடி
ஊமையின் காதல்
எங்கே புரியப் போகிறது
செவிடாகிப் போன
உன் மனதிற்கு...

மறதிக்காரன்

எல்லோரும் சொல்கிறார்கள்.
நான் ஞாபக மறதிக்காரனாம்...
அவர்களுக்கு எங்கே
புரியப் போகிறது...
நாம் காதல் கொண்டு
வாழ்த்த நொடிகள்
ஒவ்வொன்றும் நீங்காது
நினைவில் நிற்பது...

மழலை

மன்னிக்கத் தெரிந்த
முதல் மனிதன்
மழலை ...
ஏறக்குறைய
கடைசி மனிதனும்
அவனே...

கூட்டஞ்சோறு

குழந்தைகளின்
ஜமா பந்தி
கூட்டஞ்சோறு...

Tuesday, 26 July 2011

வரம்

இருபத்து நான்கு
மணி நேரமும்
சிரித்துக் கொண்டிருக்கும்
வரம் உண்டென்றால்,
என்னைப் போல்
அதிர்ஷ்ட்டக்கார ரசிகன்
எவனும் இல்லை...
என்னவள் சிரிக்கும்
அழகிலேயே லயித்து போக...

Tuesday, 19 July 2011

நீ

நீ நீ நீ
நீ நீ நீ
நீ நீ நீ
நீ நீ நீ
நீ நீ நீ
நீ நீ நீ
நீ நீ நீ நீ

இப்படி நான் பார்க்கும்,
போகும் இடமெங்கும்
நீ தாண்டி அன்பே....

Saturday, 2 July 2011

வேலை தேடும் பட்டதாரி

தோல்விகளும்
புறந்தள்ளல்களும்
விடாது மிரட்டினாலும்
நாங்களும் கஜினி தான்...

மீண்டு வருகிறது

யாரோ என்னை தட்டி
அழைக்கையில் மட்டும்
எனக்குச் சொந்தமென
மீண்டு வருகிறது
எனது சிந்தனை
உன் நினைவில் இருந்து...

காதல்

கனவுகளோடு வாழ்க்கை
கலையாத காதல்
நிஜமாகா கனவு
தீரா தாகத்தோடு
நீண்டதொரு சாலையில்
தனியாகப் பயணம்...