Monday, 27 December 2010

சித்திரவதை

உன்னை
என் குழந்தையாய்
என் நெஞ்சில் சுமந்தேனடி
இதுநாள் வரையிலும்...
இன்றோ என்னெதிரில்
கைகோர்த்து கணவனோடு,
நெஞ்சில் அணைத்த குழந்தையோடு....
இதற்காகவாவடி காதலித்தோம்.
உனைப் பார்த்த இந்நொடியே
உயிர் துறக்கலாமடி.
மரணம் வரையிலும்
இக்காட்சி அணுவணுவாய்
என்னைச் சித்திரவதை செய்வதை
தடுத்திட...

No comments:

Post a Comment