Monday, 27 December 2010

காதல் மரம்

காதல் விதையை
என் நெஞ்சில் புதைத்து,
உன் பார்வையில் தினம்
உரமிட்டு வளர்த்துச் சென்றாய்.

உன் பிரிவில்
விட்டுப் போன மரத்தைப்
பட்டுப் போக விட
மனம் இல்லையடி அன்பே...

நீ இல்லாத நெஞ்சில்
நீ இட்ட காதலாது
வளரட்டும் நிரந்தரமாய் என்று
வளர்க்கிறேன் நாளொரு வண்ணமாய்
என் கண்ணீர் கொண்டு...

No comments:

Post a Comment