Tuesday, 28 December 2010

சொன்னாலே போதுமே

காதலைப் பற்றி சொல்லிட
இத்துணைக் கவிதைகள் எதற்கு அன்பே
சுருக்கமாக
நீயும், நானும் எனச்
சொன்னாலே போதுமே...

அர்த்தமற்ற நாட்கள்

நெஞ்சுக் கூட்டை அடுப்பாக்கி
உன் நினைவால் நெய்யூற்ற
பற்றி எரிகிரதடி என்னிதயம்..
நெருப்பின் தணலில் தகதகத்து
உருவமற்ற மெழுகாய்
வெந்து உருகுகிறதடி
அர்த்தமற்ற என் நாட்கள்...

இறந்த காலம்

முடிந்து போன நேற்று
எல்லாருக்கும் இறந்த காலமாய்...
எனக்கு மட்டும்
இறப்பினைக் கொணரும் காலம்...
மாலை நேரம்
நம் காதலால்
உன் நினைவில் படும்
கஷ்டங்களை எல்லாம்
இறக்கி வைக்க
கோவில் உள்ளே செல்ல,
நீயோ தூக்கச் சொல்லி அழுகும்
உன் குழந்தையோடு...
சமாதானம் செய்ய தூக்கி வைத்தாய்..
குழந்தையை மட்டுமில்லையடி
உந்தன் காதல் வலிகளையும்
மேற்கொண்டு என்னில்...

பழமொழி

கற்றுத்தந்தவரை
உள்ளளவும் நினைக்கச்
சொல்லுது பழமொழி..
எனக்கு கவிதை எழுத
கற்றுத்தந்தவள் தான்
இன்று மாற்றானின்
மனைவி ஆகிவிட்டாளே..
பிறன் மனை நோக்கா?
என வேறு பழமொழி...
நான் என்ன செய்ய?

காதல் ராட்சசி

நீ ஒரு காதல் ராட்சசி..
உந்தன் நினைவுப் பசிக்கு
என் நேரங்கள் போதவில்லையோ?
வாழ்க்கையே கேட்கிறாய்...

காதலில் மட்டும்

மணிக்கணக்கில் காத்திருப்பும்
பதில் வந்திடும்வரையில் பொறுமையும்
இந்நாள் வரை கண்டிராத மனங்களும்
புன்னகை பூத்து வரவேற்பது
காதலில் மட்டுமே...

மூன்றாம் உலகப்போர்

உன் விழிகள் பார்க்கையில்
மூன்றாம் உலகப் போர்
ஒவ்வொரு முறையும் என்னுள்...
ஆனாலும் வழக்கம் போல்
உன்பக்கம் மட்டும் இழப்பில்லை...
என்னிடம் இழப்பதற்கு
இனி ஏதும் இல்லை அன்பே...

நான்

வரம் பெற தவம் செய்து,
கடவுள் மனமிரங்கி
காட்சி தரும் வேளையில்,
வரத்தை மறந்து கடவுளின்
அழகில் லயிக்கும் பக்தனின்
நிலையில் தானடி
காதலைச் சொல்லவந்து
உனைப் பார்த்து மெய்மறந்து நிற்கும்
நானும்...

நிஜங்கள்

நிஜங்கள் யாவையும்
நிழற்படமாய் பதித்தால் என்னவோ
நிஜமாக வேண்டிய நினைவுகள் யாவும்
நிழலாகவே போனதோ? என்னை
நிலையில்லாமல் செய்ததோ?

காதல் வலி

திக்கு திசையற்ற
காதல் உலகினில்,
அன்பெனும் கரம் கொண்டு
என்னை அழைத்து வந்து,
இப்படி பாதியிலே
அறுந்துபோன காத்தாடியாய்
தவிக்க விட்டுவிட்டயடி..
உன்னைத் தேடியும் பயனில்லை
மறந்து போய்
வெளியேறவும் வழியின்றி
விழியில் வழியும் நீரின்
வலியோடு...

காகிதப் பூ

காதலில் தோல்வி அடைந்த பின்
எனக்கான வாழ்க்கை
இல்லையென்று போனாலும்,
என்னைச் சுற்றி உள்ளவர்களுக்காக
வாழும் போதும் இனிமைதான்.

எனக்காக வாழாமல்
என்னைச் சார்ந்தவர்களுக்காக
வாழ்வது தானே வாழ்க்கை.
ஆனால்,
எனக்காய் என்றால்
வாழ்க்கை ஒரு காகிதப் பூ...

சூடா மலர்

என் மனதையும்
காதலையும்
நன்கு அறிந்த
நீ ஏற்காத நான்...
ரசித்துச் சென்றதில்
சூடாத மலர்..

வருகைப் பதிவேடு

நான் தினமும்
கல்லூரிக்கு வந்திடுவது
வருகைப் பதிவேட்டிற்க்கு அல்ல...
காதலின் தினத்தில்
அன்றைய வருகைக்கு
உன் ஓர விழிப் பார்வை எடுக்கும்
பதிவேட்டிற்க்குத் தானடி...

இருமல்

உணவருந்தும் வேளையில்
நான் இருமினேன் - உடனே
நான் தான் நினைத்தேன் என கூறினாள்...
அவள் இருமினாள்
நான் ஏதும் கேட்காததால்
என்னை நினைத்தாயா?
என்னைப் பார்த்து வினவினாள்..
நான் பதிலேதும் கூறாமல்
அருகில் உள்ள
அவள் தங்கையை பார்த்தேன்
அவள் இருமுகிறாளா என்று...

உன் தங்கைக்காக

நிலவு இல்லையென்றாலும்
வானம் இருக்கும்
விண்மீனுக்காக...

மணம் இல்லையென்றாலும்
மலர் இருக்கும்
வண்டுக்காக...

காட்சி இல்லையென்றாலும்
கண்கள் இருக்கும்
உணர்ச்சிகளுக்காக...

நீ இல்லை என்றாலும்
நான் இருப்பேன்
உன் தங்கைக்காக...

ஞாபகம்

பெண்ணே
ரோஜாவினைப் பார்க்கையில்
உன் ஞாபகம்...
அதிலிருக்கும்
முட்களைப் பார்க்கையில்
உன் அண்ணன்கள் ஞாபகம்...

வாழ்க்கை நொடிகள்

கூட்டை வைத்துக் கொண்டு
ஊறும் நத்தையின் பயணம் கூட
வேகமானது தானடி...
உன் நினைவுகளை
நெஞ்சில் சுமந்து கொண்டு
கழியும் என் வாழ்க்கை
நொடிகளைக் காட்டிலும்...

தற்புகழ்ச்சி

தன்னைத் தானே புகழ்வது தகுமோ?
தற்புகழ்ச்சி கூடாதடி அன்பே..
அழகாய் இருக்கிறது எனக்
நீ கூறிய கவிதைகள் யாவும்
உன்னைப் பற்றி எழுதியது தானடி..

வார்த்தைகள்

அது எப்படியடி பெண்ணே
உன்னைப் பற்றி
எழுதிடும் பொழுது மட்டும்
என் வார்த்தைகள்
வாஞ்சனை இல்லாமல்
கோர்வையாய் வருகிறதடி...

சிரிப்பு

வாய் விட்டுச் சிரித்தால்
நோய் விட்டுப் போகுமாம்
யார் சொன்னது?
அவள் என்னைப் பார்த்து
சிரித்ததை பார்த்த பொழுதே
நோய் வந்து சேர்ந்தது
என்னுள் காதலாய்...

மின்னல்

மின்னலே
என்னவளிடம் கற்றுக்கொள்
உயிரை எப்படி
பறிக்க வேண்டுமென்பதை.
அவள் கண்களில் இருந்து...

ரோஜா

ரோஜாவே
என்னவள் மனதில் இடம்பெற
வருடங்கள் பல காத்திருக்கிறேன்
ஆனால் நீ
எத்தனை வருடங்கள் காத்திருந்தாய்
இன்று அவளின் கூந்தலில் நீ...

கால்

பூ பட்டு கால் நோகுமோ
என்று கேள்விப்பட்டுள்ளேன்
அதை இன்று தான் உணர்ந்தேன்
நீ கால் இடறி
என் காலில் மிதிக்கும் பொழுது...

நீயும் நிலவும்

மானிடர் இரசிக்க
நிலவைப் படைத்த இறைவன்
அந்த நிலவும் இரசித்திட
உன்னைப் படைத்திட்டான் போலும்..
தினமும் பிறைநிலவாய்
திரைமறைவில் நின்று எட்டிப்பார்க்கும்
பழக்கம் அதனால் தானோ...

கண்ணீரை கேட்கிறது

கவிதை நானும் எழுதுகையிலே
வெளிறிய வாழ்க்கையை காகிதமாக்கி
வாழ்ந்த நிமிடங்களை வார்த்தையாக்கி
மையாக என் கண்ணீரைக் கேட்கிறது
உன் நினைவுகள்...

Monday, 27 December 2010

கொடுமை

மரணத்தின் வலி தான் கொடுமையாம்...
உன்னைக் காணாத நாட்களின்
நான் அனுபவிக்கும் இம்சைகளை
அனுபவிக்காதவர்கள் கூறியது...

என் இதயம்

மழைகானா பயிரானது
உன்னைக் காணாத நாட்களில்
என் இதயம்...

போட்டி

இமைகளோடு
போட்டிப் போட்டுக் கொண்டு
விழித்திருக்கிறது என் இதயமும்
உன்னைக் காண வேண்டும் என்று...

நித்திரை

உன்னால் மட்டும் எப்படியடி
தூங்கமுடிகிறது...
நிதமும் என் நித்திரையை
கெடுத்துவிட்டு...

அவளது நினைவில் நான்

முரடனாய் திரிந்த எனக்கு
தோழியாய் வந்தமைந்தவள்...

நான் புரியும் தவறுகளுக்கு
அன்பினால் தண்டித்தவள்...

கல்வியையும், காலத்தையும்
கற்றுக்கொடுத்தவள்..

என் எதிர்மறை ஆட்டத்திற்கு
முற்றுப்புள்ளி வைத்தவள்...

தோழியென்ற வார்த்தைக்கு
அகராதி செயவித்தவள்...

தனித்திருந்த என்னை குடும்பத்தோடு
இணைத்தவள்...

என் பெற்றோரும் பாராட்டா
என் திறமையை வெளிக்கொனர்ந்தவள்....

இவள் அன்பினில் வாழ்கை கழியாதா
என்ற ஏக்கத்தை உண்டாக்கியவள்...

புரிந்த தோழியை விரும்புவது தகுமோ
என்ற வினாவை கேட்டவள்...

கடைசியில் என்
இதயத்துணையாய் நின்றாள்...

ஜாதியின் பசிக்கு
இரையாகும் காதலில்
எங்களது ஏழரை ஆண்டு காதலும்
விதிவிலக்கல்ல...

என் உயிர் பறிக்கும்
பாசக்கயிர்றைக் காட்டி
அவளுடன் என் பாசத்தை பிரித்தனர்...

மனதினை புதைத்து
திருமணத்திற்கு பந்தற்கால் நட்டனர் ...

அவளது நெஞ்சில் மாங்கல்யம் தொங்கிட...
எனது நெஞ்சை காதல் நினைவுகள் இறுக்கிட..

இன்று அவள் நினைவில்
நான் உள்ளேனோ என்று தெரியாது
அவளது நினைவில் நான்...

உதிரத்தை கண்ணீராய்

உன் நினைவைச் சுமந்து
உடலெங்கும் பரவியுள்ளதடி
என் உதிரம்...
உனது நினைவுக் கொடுமையிலிருந்து
மீளத்தானடி வடிக்கிறேன் உதிரத்தை
என் கண்ணீராய்...

உன் பார்வை

பெண்களின் கண்களை
மீன்களுடன் ஒப்பிடுவது
சரிதான் போலும்...
நீ பார்க்கும் பார்வையொன்றும்
என்னிதயம் கடித்துச்
செல்கிறதடி....

நீ

பூத்தது
முட்கள் இல்லாத ரோஜா
தோட்டத்தில் இல்லை
எனது இதயத்தில்
*** நீ ***

தீவாய் உன் காதல்

நீ என்னைப் பார்த்தவுடன்
காதலின் கடலில் விழுந்துவிட்டேன்...
நினைவென்னும் அலைகளிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
மூழ்கிக்கொண்டிருக்கிறேனடி...
விழுந்த என்னைத் தாங்கிட
ஓடமும் இல்லை...
கை கொடுத்து இழுத்துச் செல்ல
துணையும் இல்லை...
தேடிக் கொண்டிருக்கிறேனடி
என்கேவாவது தெரியுமா
தீவாய் உன் காதல்...

என் நாட்கள்

ஆரம்ப காலங்களில்
நேரமே போகாமல் அலுத்துக்கொண்ட
நாட்கள் தான் எத்தனையோ...
ஆனால் இன்றோ
உன்னை நினைக்க ஆரம்பித்தால்
பாலைவனத்தில் விழுந்த மழையாய்
கரைகிறதடி நொடியில்...

நூலாம்படை

என் நெஞ்சமெங்கும்
நீதானடி நீலநிற வானமாய்
வியாப்பித்துள்ளாய்....
உன் நெஞ்சில்
எங்கேயாவது மூலையில்
சிறு நூலாம் படையயாவது
படிந்துள்ளேனா அன்பே..

காதல் நினைவுகள்...

நினைவுத்
தீப்பொறி பட்டுவிட்டால்
எரிந்து போகும் கற்பூரம்
காதல் நினைவுகள்...

கண்ணீர் வரிகள்

அவளுடன் வாழ்த்த வாழ்க்கையை தான்
வார்த்தையாக்கி உள்ளேன்.
அவளின்றி வாழும் வாழ்வை
கனவாகக் கருதியே வாழ்கிறேன்.
விரைவில் கலைந்துவிடாதா என்று...

மனம் - நடக்காத நிகழ்வுகளையே தான்
அடிக்கடி என்னுகிறதேன்று
என் மூளைக்குத் தெரிகிறது.
தெளிந்து விடத் துடிக்கின்றது - இருப்பினும்
அவளது நினைவுகள் என்னை மூழ்கடித்து விடுகிறது.

அந்த வலியை மனதிலே வைத்திட
எனது சுற்றமும், சூழ்நிலையும் தடுக்கிறது.
அதனால் தான்
என் வலிகளை வடிக்கிறேன்
கண்ணீர் வரிகளாக...

உன் முகம்

ஒரு துளியில்
ஆயிரம் வெண்ணிலாக்கள்
சிந்திச் சிதறிய
மழைத்துளியில் தெரியும்
உன் முகம்...

பொறாமை

பூக்களின் மீதும்
பொறாமை தானடி
நீ கூந்தலில் சூடும் பொழுது...

உன் கண்கள்

கண்களை பறிக்க
மின்னலைப் படைத்த இறைவன்
என் உயிரைப் பறிக்க
உன் கண்களை படைத்துவிட்டான்...

வேடிக்கை

மலர்கள் வாடுவதையும்
வேடிக்கை பார்க்காத நீ
என் மனதை மட்டும்
வாட விட்டு வேடிக்கை
பார்ப்பது ஏனோ...

அதிகமே

சொந்தங்களில்
நான் கண்ட அன்பிலே
உன் காதலில் நான்
கண்டது அதிகமே...

அணைக்காதோ

என் விழிகள் பேசும் பொழுது
உன் மௌனம் பேசாதோ...

என் சுவாசம் தேடும் பொழுது
உன் வாசம் கிடைக்காதோ...

என் கண்கள் பார்க்கும் பொழுது
உன் இதழ்கள் மலராதோ...

என் கவிதைகள் படிக்கும்பொழுது
உன் கனவுகள் திறக்காதோ...

என் நினைவுகள் தோன்றும்பொழுது
உன் மறுப்பு கலையாதோ...

என் அவஸ்தைகள் பார்க்கும்பொழுது
உன்னிடம் இறக்கம் பிறக்காதோ...

என் மரணம் தழுவும் பொழுதும்
உன் காதல் அணைக்காதா....

பெயரின் சிறப்பு

என் பெயரின் சிறப்பை
இன்று தான்
தெரிந்து கொண்டேன் பெண்ணே...
உன் உதடுகள்
என் பெயரை உச்சரித்த பொழுது....

எங்கள் வாழ்க்கை

காதலைச் சொல்லி
ஆண்டுகள் ஏழு வாழ்ந்து...
அவளுக்கு மணமாகி,
இன்றோ தாயாரும் ஆகிவிட்டாள்...
நான் எழுதிய கவிதைகள் அனைத்தும்
என் வாழ்வில் நடந்தைவையே....
அவளோடு வாழ்ந்து முடித்தாகி விட்டது...
அவளோடு வாழ்ந்த நாட்கள்
என் வாழ்வில் திரும்பக் கிடைக்காத
பொக்கிசங்கள்...
வம்படியாக என்னிடம் இருந்து
பறித்துச் செல்லப்பட்ட செல்வங்கள்...
நாங்கள் வாழ்ந்த
வாழ்க்கையின் நினைவுகள் மட்டும்
நெஞ்சோடு புதைந்து போன புதையல்கள்...

காதல் வரம்

காதலிலே
அனுபவிக்கும் மகிழ்ச்சியை விட
பல மடங்கு வலியை அனுபவிக்கக்
கற்றுக்கொள்ள வேண்டும்...
சுமையான வலிகள் தரும் சுகங்கள் தான்
காதலின் கிடைக்கப் பெறா வரம்.
காதலில் வென்று திருமணத்திற்குப் பின்
காதலை தொலைத்து விட்டு
வாழும் மனிதர்களில்
எனக்கோ மரண வாசல் வரை
காதலும் அதன் நினைவுகளும்
துடித்துக் கொண்டே இருக்கும்...
இந்த வரம் ஒன்றே போதும்

காதல்

காதல்
இருவேறு முகவரிகளில்
ஒருவர் வாழும் விந்தை..

மோட்சம்

தினம் தினம்
என் கண்ணீர் மழையில்
நனைந்திடும்
என் தலையணை கேட்டது
இன்னும் எவ்வளவு கண்ணீர்
உன்னிடம் உள்ளதென்று?
என்னவள் தந்த
மக்ழிச்சி தான் தினமும்
கண்ணீராய் கரைகிறது என்றேன்..
அவள் தந்த
மக்ழ்ச்சிகள் யாவும் கரைய
உன் ஆயுளும் வேண்டிடுமே?
அது வரையில்
தன் ஆயுள் போதாதென்று
சொல்லிக்கொண்டே
மோட்சம் பெற்றது தலையணை....

விருப்பங்கள்

அவளுக்கென
விருப்பங்கள் இருந்தாலும்
எனது விருப்பங்களை
அவளுடையதாக விரும்பும் ஜீவன்
என் காதலி....

இரை

சில நிமிடங்கள்
நாம் ஒன்றாய் இருந்த தருணங்களை
மனம் அசைபோடுகையில்
பல மணி நேரத்தை
நினைவுகள் இரையாக்கி உண்டுவிடுகிறது.
காதலின் நினைவுப் பசிக்கு
நிமிடங்கள் போதாது போல்..
அதனால் தன் என்னவோ
உன்னுடன் வாழ்ந்த
இந்த ஏழு ஆண்டுகளுக்காக
என் வாழ்க்கையையே
இரையாக்கிக் கொண்டிருக்கின்றது
உன் நினைவுகள்....

கை கோர்த்து

நாம் தினந்தோறும்
கை கோர்த்து நடந்து சென்ற பாதையில்
இன்றும் வலம வருகிரேனடி அன்பே
கைகோர்த்த படியே நீயின்றி
உன் நினைவுகளோடு...

கண்ணீர்

அன்று உன் உதட்டில்
கசிந்த புன்னகையில்
இன்று என்னிதயம்
கண்ணீர் வடிக்கின்றது...

காதல் சொல்ல

அன்றொரு அழகிய மழைக்காலம்..
கல்லூரி நேரம் முடிந்ததை
அறிவிக்க அடித்த மணி...

எங்கள் காதல் மழைக்கான
அறிகுறி இடியும்
அதுதான் போலும்...

இத்தனை நாள்
வார்த்தை பரிமாற்றங்கள் இல்லாமல்
கண்களாலே குறுஞ்செய்தி அனுப்பிய
எங்கள் காதலுக்கு கோடை மழை...

மழைச் சாரலில்
நான் ஓரமாய் ஒதுங்க
என் நிழலென
அவளும் என்னருகில் பதுங்க...

சேய் காக்கும் தாயென
விழி காக்கும் இமையாய்
என் பின்னால் வைத்தேன் அவளை
நானும் மாறினேன்
மழை தடுக்கும் தடுப்பாய்...

அவளோ என்னை நனைத்தால்
காதல் பார்வை சாரலில்...
அவள் என் பின்னால் பதுங்கிய நொடியில்
என் இதயம் முதுகுப் பகுதியில்
துடிக்கக் கேட்டேன்...

புத்தகம் கொடுக்கும் சாக்கினில்
என் இதயக் கடிதத்தையும்
கொடுத்தேன் அவளிடம்...

வாங்க மறுக்கும் பட்சத்தில்
செத்து விடும் சாக்கினில்
என்னை விட்டு வெளியேறிய என்னிதயம்
வெட்கப்புன்னகை பூத்து
அவள் வாங்கிய அந்த நொடியில்,
இதயம் மழையில் குதுகளிக்கின்றது...

சம்மதமா என்று நான் தலையாட்ட
என் கரம் கிள்ளி
சரி என்று சொன்ன நொடி
உயிர் ரெண்டும் வெளியேறி
மழையில் ஆடியது கை கோர்த்து...

இப்பொழுது மழை பெய்ந்து ஓய்ந்தாலும்
அந்த நாளின் பசுமை மட்டும்
காய மறுக்கின்றது
எங்கள் காதல் நினைவுச் சாரலில்....

கத்தி

கல்லூரிக்குள்
கத்தியுடன் திரிந்த என்னிடம்
காதலைத் தந்து
கவிதை எழுத வைத்தாயடி...
இன்று கவிதைகளையே கத்தியாக்கி
நம் காதலை
வெட்டி எறியச் சொல்கிறாய்...

எனைப் பிரிந்து

காதலிக்கும் காலங்களில்
சந்தித்து விடைபெறும் பொழுது
முத்தத்தினால் நனைத்திடுவாயடி
என் கன்னங்களை...
ஆனால் இன்றோ
கண்ணீரில் நனைக்க வைக்கிறாயடி
என் கன்னங்களை தினம் தினம்
நிரந்திரமாய் என்னைப் பிரிந்து...

மரியாதை

உன்னைப் பற்றி எழுதிய
கவிதைகளுக்கு கிடைக்கும்
புகழ்ச்சி வார்த்தைகள் எண்ணுகையில்
கடவுளுக்கு கிடைக்கும் மரியாதை யாவும்
அவரை பூஜிக்கும் பூசாரிக்கு
கிடைப்பது போலல்லவா இருக்கிறது,....

கள்ளி

எனக்குத் தெரியாமல்
என் இதயம் திருடியே கள்ளியே...
எனக்கும் கற்றுக்கொடு
இதயம் திருடுவதற்கு,
உன் இதயம் திருட...

உன் பிரிவில்

எல்லையில்லா வானம்
என் வாழ்க்கை.
வியாப்பித்துள்ள நீல நிறம்
நம் காதல்
வெண் மழை மேகங்கள் யாவும்
உன் பிரிவில் நான் காணும்
கண்ணீர்த் துளிகள்....

பறிபோனது

உன்னைப் பார்த்ததும்
பறிபோனது
என் இதயம்
மட்டும் இல்லையடி அன்பே
என் நிம்மதியும் தான்...

காத்திருப்பு

காதலைச் சொல்லிவிட்டு
பதிலுக்காக காத்திருப்பது
ஒரு ரணமான இன்பச் சுகம்...
அத்தகைய காத்திருப்புக்காக
காத்திருக்கிறேன்...
உன்னிடம் சொல்ல
என் காதலோடு....

கொடியது

உன்னோடு வாழ்ந்த
நிஜங்களை விட
கொடியது பெண்ணே...
நீயின்றி என்னை வாழவைக்கும்
உந்தன் நினைவுகள்....

தண்டனை

கொலை செய்தவனுக்கு தானடி
ஆயுள் தண்டனை - ஆனால்
சிரிப்பினால் கொல்லும் - உனக்காக
நானல்லவா அனுபவிக்கிறேன்
காதலில் ஆயுள் தண்டனை....

என் காதலில்

விடுகதையகிப் போன
என் காதலில்
ஒளி இல்லாத நெருப்பில்
தினம் தினம்
உருகிக் கொண்டிருக்கும்
மெழுகுவர்த்தி நான்....

நான்

நான் ஒரு கோமாளிக் கண்ணாடி
என் முன்னாள் நிற்பவர்களின்
மனதின் கவலைகளை நீக்கி
முகத்தில் சிரிப்பினை மட்டுமே
காட்டிக்கொண்டிருப்பேன்...

உன் திருமணம்

எனக்கென பிறந்த
என்னவளைப் பாருங்கள் என்று
இறுமாப்புடன் மார்தட்டிய என்னை
உன் மௌனம் என்னும் உளியினால்
நெஞ்சில் அல்லாமல்
முதுகில் அல்லவா குத்திவிட்டாய்
உன் திருமண நாளில்....

கேள்விக்குறியாக

என் வார்த்தைகளாய்
என்னுடன் விளையாடிக் கொண்டிருந்த
என் கவிதை - இன்று
வார்த்தை மாறிப் போன விந்தை என்ன?
இதை பிழையென்று சொல்வதா - என்
வார்த்தை விதி என்று என்னவா?
பிழையாக நிற்கிறேன் தனியாக
ஒரு கேள்விக்குறியாக...

என் வலி

என் இதயத்தின் பிம்பம் நீ.
என்னை விட்டுப் போன
ஒவ்வொரு நொடிகளுமே
நெருப்பில் வெந்த இதயத்தில்
திராவகம் ஊறிய வேதனையடி
என்னுள்ளே...

காதலிக்கும் போது
உன் அன்பினை, ஆசையினை
விருப்பத்தினை, காதலினை
எதிர்பார்ப்பினை
சொல்லும் போதெல்லாம்
புலம்பலை தானடி நினைத்தேன்..
கேட்பதை போல இருந்தேன் - உன்
மனதினை முழுமையாக
புரிந்து கொள்ள மறந்தேன்...

அதனால் தான் எனவோ
இன்று என்னை புலம்பலில் விட்டுவிட்டு
அதனை கேட்கக் கூடாத தூரத்தில்
வாழ்கிராயடி அன்பே....

ஒரே இடத்தினில் அடிக்கடி
அடி விழுகையில் மரத்து போகுமடி.
ஆனால் உன் பிரிவால்
ஒவ்வொரு நொடிகளுமே
ஒவ்வொரு அடியென - என் மனதினை
ரணமாக்கிக் கொண்டே செல்கிறது...

நாம் ஒன்றாய் இருந்த
நாட்கள் தானடி - இப்பொழுது
என் இதயத் துடிப்பாய்
துடித்துக் கொண்டிருக்கிறது....

என் வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முதுமை வேண்டாமடி செல்லமே!
தனிமையும், உன் நினைவுகளுமே
என்னை மரண வாசலை நோக்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
அழைத்துச் செல்கிரதடி - உன்
பிரிவினால் என் மனதினை
முதுமையடையச் செய்து.......

அவளின் நினைவுகளுடனே

கை கோர்த்து நடந்து சென்ற
பாதையில் பதிந்த
இரு ஜோடி பாதச் சுவடுகளில்
இப்பொழுது ஒரு ஜோடி மட்டும் தனியே...

எதிர்கால கனவுகளில்
மூழ்கிக் கிடந்த
இரண்டு இதயங்களில்,
ஒன்று மட்டும் கரையினில்...

வாழ்க்கை என்னும்
கண்ணாம்மூச்சி ஆட்டத்தில்
நிரந்தரமாய் ஒளிந்துகொண்ட
உன்னை கண்டுபிடிக்க முடியாத
குழந்தையின் தவிப்பினில்....

நித்தம் நித்தம்
காதல் நினைவுகளிலே
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும்
இதயங்களில் ஒன்று இயங்காமல்
மற்றொன்று இயங்க வழிதெரியாமல்
நீங்காத வலியோடு...

அவளின் நினைவுகளை
மறக்க நினைக்கும்
என் நினைவுகளை,
மறந்து நகர்ந்து கொண்டிருக்கிறது
என் வாழ்க்கை
என்றும் அவளின் நினைவுகளுடனே....

சீக்கரம் சொல்லிவிடு

உன் பதிலுக்காக
காத்திருக்கிறேன்
கண்களில் கண்ணீருடன்...
சீக்கரம் சொல்லிவிடு பெண்ணே
என் கண்ணீரில்
என்னுயிர் கரைந்திடும் முன்னே...

சொல்லாதே பெண்ணே

சொல்லாதே பெண்ணே
என்னைப் பிடிக்கவில்லை என்று
உனக்கு பிடித்ததெல்லாம்
எனக்கும் பிடிக்கும் பொழுது,
உனக்குப் பிடிக்காத
என்னையே எனக்குப் பிடிக்காமல்
போய்விடுமடி

வேதனை

பிரசவத்தில்
தாய் அனுபவிக்கும் வேதனையை
நொடிக்கொரு முறை
அனுபவிக்கிறேன் நான்
என் இதயம்
அவளது நினைவுகளை
பிரசவிக்கும் பொழுது....

ஈர்ப்பு

எத்துணைக் கவிதைகள்
அன்பே உன்னை வருணித்து...
எதற்குமே மசியவில்லையே நீ
"குண்டூஸ்" என்று சொல்கையில்
கிறங்கிடுவதைப் போலே என்று
நொந்து கொண்டேன் - பிறகு
தெரிந்து கொண்டேன்.
வருணிக்கும் வார்த்தையில் இல்லை
வசிகரிக்கும் காதலின் வார்த்தைகளில்
ஈர்ப்பு உள்ளதென்று...

பட்டிமன்றம்

பட்டிமன்றம் வைத்திட எண்ணி
நடுவரைத் தேடுகிறேன்...
வண்ணத்துப் பூச்சியின்
சிறகடிப்பு,
உன் இமைகளின் படபடப்பு,
இரண்டிலும் அழகு
எதுவென்று தெரிந்திட வேண்டி...

வேறென்ன சிறந்தது

ஒன்றை விட மற்றொன்று
சிறந்தது உண்டாம் உலகில்.
எனக்கு மட்டும்
பொய்த்து போகிறது சில இடத்தில்,
காதலில் வேறென்ன வார்த்தை
இருந்துவிடப் போகிறது
என்னவள் என்னைக் கூப்பிடும்
"டேய் புருஷா" என்பதற்கு...

கோபம்

காதலியானவளை யாரும்
கோபப்படுத்தி பார்க்க மாட்டார்கள்
என்னைத் தவிர...
கோபத்தில் மட்டும் தானே
என் பெயரினை
என்னவள் உச்சரிக்கிறாள்...

சரியா? தவறா?

என்னில் கலந்திருக்கும்
என் இதயத்தில் ஒளிந்திருப்பவளே..
நில்லாமல் துடிக்கும் என்னிதயம்
உன் பெயரினை சொல்லித் துடிப்பது
உனக்குத் தெரியவில்லையா...

உன்னைப் பார்த்த நாள் முதல்
நான் படும் அவஸ்தைகளை
உனக்கெப்படிச் சொல்லுவேன்...
நினைவில் ஒவ்வொரு நொடிகளையும்
நரகமாய் கழிப்பது உனக்கெப்படி புரியும்...

மண்ணிலே நீர் விழுந்தால்
மழையென்று மண்ணிற்குத் தெரியும்...
மேனியில் நீர் துளிர்த்தால்
பனியென்று மலருக்குப் புரியும்....
என் மனதில் உன் பார்வை விழ
காதலென்று தெரியவில்லை...

ஆரம்பத்தில் நேரமே கரையாமல்
அலுத்துக் கொண்ட நாட்கள் எத்தனையோ.
இன்றோ உன்னை நினைக்க ஆரம்பித்தால்
பாலையில் பெய்த மழையாய்
கரைகிறது என் நேரம்...

சொந்தமே இல்லையென்று பலர்
எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்,
உன்னை எந்தன் சொந்தமாக
எண்ண ஆரம்பித்த நாள் முதல்,
நெருங்கிய சொந்தங்களைக் கூட
அந்நியமாய் பார்க்கிறது கண்கள்...

என்னெதிரே என்னிடம்
யார் வந்து பேசினாலும்,
நீயே பேசுவதாய் பிரம்மை...

உன்னைக் காண்கிறேனோ இல்லையோ
உன் வீட்டினைக் கடக்கும் வேளையில்
மனதில் பொங்கும் மகிழ்ச்சிக்கு
வேறொன்றும் இவ்வுலகில் இணையில்லை...

வானில் மேகங்கள் ஒன்றையொன்று
துரத்திச் செல்லும் வேளையில்,
அதிலே மேகத்திற்க்குப் பதில்,
நீயும் நானுமாய் தோன்றும்...

இத்துணை நாட்கள் வாழ்வில் இல்லா
புதுமையான மாற்றங்கள் யாவும்
இப்பொழுது மட்டும் எப்படி?

மகிழ்ச்சியாய் சுற்றித் திரிந்த
நாட்கள் தான் போனதெங்கே?

நிலையிலே இல்லாத என் மனம்
போன இடம் தானெங்கே?

என் மனதில் எழும் வினாக்களுக்கு
விடையளி பெண்ணே - அப்படியே
நானுன்னை நினைத்து வாழ்வது
சரியா? தவறா? என்றும்...

சொல்லிவிட்டன உன் காதலை

கள்ளத்தன பார்வைகளும்,
கண்களில் குறுகுறுக்கும் புன்னகையும்,
வந்துவிட்டதை தெரிவித்திடும் வளயலோசையும்,
கவனிப்புகளைக் காட்டிடும் செருமல்களும்,
ஜீவன் தெரியா நேரத் தேடல்களும்,
நோய்வாய்ப்பட்ட நாட்களின் விசாரணைகளும்,
நாட்கணக்கில் முகம்காணா தவிப்புகளும்,
என்னெதிரே பேசப்படும் படபட வார்த்தைகளும்,
நீ சொல்லிடும் முன்னரே
சொல்லிவிட்டன அன்பே என்னிடம்
உன் காதலை...

காதல் நாடகம்

வெகுநாட்களாய் நடைபெற்ற
அழகிய நாடகம்...
நானும் நீயும் மட்டும் நடிகர்கள் - ஆனால்
ஏற்க வேண்டிய பாத்திரத்தை மறைத்து
நண்பர்களாய்...

உனது அழகிய தோழி நடிப்பிற்கு
நம்மைச் சார்ந்தவர்களே
கருத்து கூறினார் காதலென்று...
இல்லை இல்லை என்று
உன் காதலை மல்லிகைப் பூவாய்
பொத்தி வைத்தாய்
யாரும் அறியக் கூடாதென்று...

காற்றும் காதலும் ஒன்றென்று
அறியவில்லையாடி நீ.
பூவின் வாசமும், காதலின் வெளிப்பாடும்
மறைத்தாலும் மறையாது என்பது
எல்லாருக்கும் தெரியும்
பூ விற்பனை செய்பவரையும்
காதலிப்பவரையும் தவிர....

ஆனாலும் நீ செய்யும்
ஒவ்வொரு விசயங்களும்
உன்னிடம் இருந்து கொண்டு,
உனக்கெதிராய் எனக்காய்
செயல்பட என்ன செய்வேன்...

இன்னும் எத்தனை நாட்களுக்கு தாண்டி
பொத்தி வைத்து மறைக்கப் போகிறாய்
மல்லிகைப் பூவாய் மணக்கும் நம் காதலை...

அப்படித்தானடி அன்றொருநாள்
நீ அழைக்கும் பொழுது
வெகுநேரம் சிக்கவில்லை உன்னிடம்
என் எண்கள்...

வெளியில் செல்ல, விட்டுச் சொல்லும்
குழந்தையின் ஏக்கத்தின் கோபத்தை
உன்னிடம் கண்டேனடி அன்று...

கிடைத்ததும் கோபப்பட்டாய்
யார் என்ன வென்று கேட்டாய்...
நானும் நெருங்கிய தொழிஎனச் சொல்லி
மேலும் நெய்யூற்ற....

இத்தனை நாள் மறைத்து வைத்திருந்து,
முதன் முறையாய் நீ கூறாமல்
தெரிந்து கொண்டேனடி
உன் கோபத்தினை அல்ல
உன் காதலை...

துடிப்பு

இதயத்தின் படபடப்பு
இதயத் துடிப்பாய்..
ஆனால் எனக்கு மட்டும்
உன் நினைவுகள் யாவும்
நொடிக்கொரு காட்சியாய்
தோன்றி மறையும் சப்தமாய்...

இனிமை

குழலினிது யாழினிது அதைவிட
மழலை சொல் தானினிது என்பர்
காதல் மொழி கேளாதோர்...

மௌனம்

உலகம் என்னை ஏசிய
ஆயிரம் வார்த்தைகள் கூட
என் மனதை
ரணம் கொள்ளச் செய்யவில்லையடி
உன் மௌனத்தின்
வலியைப் போல....

தோல்வி

இம்முறையும்
தோற்றுவிடக் கூடாது என
என் இதயத்தோடு
சண்டையிட்டுத் தானடி வந்தேன்
அன்பே உன்னிடம் காதலைச் சொல்ல...
வழக்கம் போலவே
உன் பார்வை ஜெயத்திட
என் இதயம் தோற்றுவிட்டது...

சிம்மாசனம்

உன்னை
எனது இதய சிம்மாசனத்தில்
அமரவிட்டது யாரடி...
தெளிவான நினைவுகளாய்
இதயம் நோக்கி வந்திடும்
என் உதிரத்தை,
இதயத்துள் நுழைந்தபிறகு,
உனது நினைவுகளை ஏற்றிச்
சுமக்க வைக்கிறாயடி...

மேகம்

தன்னையும் கலைத்திட
கெஞ்சுகிறது மேகம் காற்றிடம்...
உன் கை விரல்கள்
என் தலை கோதி
கேசத்தை கலைப்பதைப் பார்த்து...

பழமொழி

பழமொழிகளும் சிலநேரம்
ஆண்களிடம் தோற்றுவிடுகிறது..
புயலுக்குப் பின் அமைதியாம்...
ஆண்களின் மனதில்
புயல் வீசிடக் காரணமே
பெண்களின்
அமைதியான புன்னகை தானே...

நட்பு

ஒரு வரியில்
கவிதை கேட்டார்கள்
நான் நட்பு என்றேன்.
கவிதை என்றால்
பொய்கள் என்றார்கள்..
பொய்யான வார்த்தைகள் நடுவில்
மெய்யான உணர்ச்சிகள் போல்
உயிர்த்தெழும் உண்மையே
கவிதையென்றேன்...
நம் நட்பினைப் போல...

நட்பு

வாழ்க்கை வியாபாரத்தில்
புன்னகை எனும்
சிறுமுதலீட்டில்
பெரிய லாபம்
உன் நட்பு...

கல்லூரி இறுதிநாள் கவிதை..

சப்தம் இல்லாமல் புன்னகை பூத்து,
சப்தமாய் கண்ணீர் வடித்து,
ஆளுக்கொரு வார்த்தையாகி,
வாக்கியம் அமைத்திடும் வேளையில்,
ஒரு சந்திப் பிழை - பிரிவு.

கண்ணீர்

உன் நினைவு குறுவாள்
என்நெஞ்சில் குத்தியதும்,
குத்திய இடத்தினில் அல்லாமல்
கண்களில் அல்லவா வழிகிறது
குருதியாய் கண்ணீர்....

குருடன்

குருடனாய் பிறந்திருந்தால்
பார்வை கண்டு கவலையில்லை...
பாதியிலே பறிபோன பார்வையில்
வாழ்க்கை வெறுமையாகிடும்
நிலையில் தானடி காதலியே,
உன் காதலில் வாழ்வைக் கண்ட
நானும்...

அழகில்லை

உன்னை அழைத்திட
மிகச் சிறந்த வார்த்தைகளை
தேடி அலைந்தும் பலனில்லை அன்பே...
எந்தவொரு வார்த்தையும் அழகில்லை
உன் பெயரை போல...

பெயர்

என் பெயரைச் சொல்லி கூப்பிட்டதும்
குரல் வந்த திசை நோக்கி
நான் திரும்பியதை விட
நீ திரும்பியது தானடி அதிகம்...

என்னிதயம்

உன் கூரிய பார்வை உளியால்
உருவமில்லா கல்லான என்னை
சிலைஎனச் செதுக்கினாய்...
உன் காதல் கை கூடிருந்தால்
முழுச் சிலையாய் உருபெற்றுருப்பேன்...
கிடைக்கப் பெறா நிலையில்,
சேதமடைந்த சிலையாய்,
கோவில் சேரா சிற்பமாய்,
உன் நினைவு அம்மிக் கல்லில்
அரைபடும் பொருளாய்
என்னிதையம் சிக்கிடுதே....

தங்கை

எனக்கு
தங்கை பிறந்து உள்ளானாம்
என்னடா இந்த வயதில
எனக் குழம்பாதிர்...
என் தாயாக எண்ணியவள்
இன்று குழந்தை பெற்றுவிட்டாள்...

காதல்

அற்பமான விசயங்களையும்
அதி முக்கித்துவமாய் காட்டும்
மாயக் கண்ணாடி
காதல்...

வளையல்

இனிவரும் ஜென்மங்களிலாவது
உன் கை வளையல்களாய்
பிறப்பெடுக்க வேண்டும் பெண்ணே
பொழுதேனும் உன் கைகளைப் பற்றி
சில்மிஷம் செய்து சிணுங்கிட...

பொம்மையும் நானும்

பொம்மை.
குழந்தைகளுக்கு உயிர்..
ஏன் பிடிக்கும்
என்ற காரணம் இல்லாமலே.
கொஞ்சிக் குலாவிடும்
கூடி மகிழ்ந்திடும்..
சில நாட்களில்,
தெரியாத காரணத்தால்
தூக்கி எறிந்து விடுமடி.
பின் சீண்டுவதும் இல்லை...

இன்று இந்நிலையில் தானடி
ஏன் எதற்கு எனத் தெரியாமல்
உன்னால் தூக்கி எறியப்பட்ட
நானும் என் காதலும்...
நீ மட்டும் எனக்கு குழந்தையாய்...

மொழிப் பெயர்ப்பாளர்

நம் இதயம் இரண்டும்
பேசிக்கொள்ளும் மொழிக்கு,
மொழிப்பெயர்ப்பாளர் வேலை
நம் கண்களுக்கு...

மறந்துவிட்டாய்

என்னை நேசிக்க தெரிந்த நீ
வாசிக்க மறந்து விட்டாயடி
என் நெஞ்சில் செதுக்கிய
உந்தன் நினைவுகளை...