காத்திருந்து
காத்திருந்து
கால்கடுத்த வார்த்தைகள்,
காதலை
உன்னிடம் சொல்லாமலே
மௌனமாய்
ஓய்வெடுக்கிறது..
Monday, 13 June 2011
Sunday, 12 June 2011
காதலோடு
யாருமற்ற தீவில்
சுற்றிலும் கடலாய்
உனது காதலில்,
குறையாத துவர்ப்பாய்
என் கண்ணீரிலும்..
நான்.. நான் மட்டும்...
இல்லை இல்லை
எனக்கான உன்மீதான
காதலோடும்...
சுற்றிலும் கடலாய்
உனது காதலில்,
குறையாத துவர்ப்பாய்
என் கண்ணீரிலும்..
நான்.. நான் மட்டும்...
இல்லை இல்லை
எனக்கான உன்மீதான
காதலோடும்...
வாழ்க்கை..
வாழ்க்கை.
முரண்பட்ட போராட்ட களம்...
இங்கு வென்றாலும்
மட்டம் தட்டி
குறை கூறிடும்
கூட்டமே அதிகம்...
தோல்விகள் மட்டும்
அதீத பாதுகாப்பாய்,
ஆயுதமும் கேடயமுமாய்
கொண்டு போரிடும்
நிராயுதபாணியான
உன்னிடம்...
தீர்க்க முடிவும்
அனுபவ அறிவும்
தெளிந்த எண்ணங்களும்
உனக்கான ஆயுதங்கள்...
உனது நிழலுமே
உனக்கு எதிரியாய்
மாறிடலாம்..
இங்கு எதிரிகளின்
ஆயுதம் மட்டும்
கூர்மை இல்லை...
தடுமாறும் பொழுது
ஏசிடும் விமர்சனங்கள்
அதைவிட கூர்மையே...
உனக்கான உதவியாய்
மூன்றாம் கையாய்
தன்னம்பிக்கை
கொண்டிருந்தால் மட்டுமே
வெளியேறும் வீரனாவாய்...
முரண்பட்ட போராட்ட களம்...
இங்கு வென்றாலும்
மட்டம் தட்டி
குறை கூறிடும்
கூட்டமே அதிகம்...
தோல்விகள் மட்டும்
அதீத பாதுகாப்பாய்,
ஆயுதமும் கேடயமுமாய்
கொண்டு போரிடும்
நிராயுதபாணியான
உன்னிடம்...
தீர்க்க முடிவும்
அனுபவ அறிவும்
தெளிந்த எண்ணங்களும்
உனக்கான ஆயுதங்கள்...
உனது நிழலுமே
உனக்கு எதிரியாய்
மாறிடலாம்..
இங்கு எதிரிகளின்
ஆயுதம் மட்டும்
கூர்மை இல்லை...
தடுமாறும் பொழுது
ஏசிடும் விமர்சனங்கள்
அதைவிட கூர்மையே...
உனக்கான உதவியாய்
மூன்றாம் கையாய்
தன்னம்பிக்கை
கொண்டிருந்தால் மட்டுமே
வெளியேறும் வீரனாவாய்...
காதலில் நான்
என்னுள் நானே
எரிந்து உணர்கிறேன்
கண்ணீராய்...
மனமென்னும்
மெழுகுவர்த்தியில்
காதல் திரி,
ஏற்றப்படுகையில் மட்டும்,
சந்தோஷ வெளிச்சம் மறைந்து
இருள் சூழ்கிறது...
தனிமைப் பொழுதுகளில்
மிகச் சரியாய்
போகும் மினசாரமாய்,
தொலைந்து போய்கிறது
என்னிலையும்
சூழ்நிலையில் கருகும்
மகிழ்ச்சிகளையும்...
பசி பிய்த்து தின்ற
உடலில் இன்று
அகிம்சாவாதியாய் உருமாற்றம்...
முன் ஜாமினற்ற
பிடி வாரன்ட்டில்
தானாய் சரணடைந்த
ஆயுள் கைதியாய்....
எரிந்து உணர்கிறேன்
கண்ணீராய்...
மனமென்னும்
மெழுகுவர்த்தியில்
காதல் திரி,
ஏற்றப்படுகையில் மட்டும்,
சந்தோஷ வெளிச்சம் மறைந்து
இருள் சூழ்கிறது...
தனிமைப் பொழுதுகளில்
மிகச் சரியாய்
போகும் மினசாரமாய்,
தொலைந்து போய்கிறது
என்னிலையும்
சூழ்நிலையில் கருகும்
மகிழ்ச்சிகளையும்...
பசி பிய்த்து தின்ற
உடலில் இன்று
அகிம்சாவாதியாய் உருமாற்றம்...
முன் ஜாமினற்ற
பிடி வாரன்ட்டில்
தானாய் சரணடைந்த
ஆயுள் கைதியாய்....
காதல் ரோஜா
ஒவ்வொரு நாளும் தனிமையில்
தற்கொலை செய்து கொள்ளும்
எனது ஆயுளின் நாட்களை தானடி
உரமாக்கிக் கொண்டு ,
வளர்ந்து நிற்கிறது காதல் ரோஜா..
அதிலும் முரணாய்
உனக்கு வாசம் வீசி
புன்னகையோடு பூத்துக் குலுங்க,
எனக்குள் குத்தும் முட்களில்
புலன்காகிதத்தோடு..
தற்கொலை செய்து கொள்ளும்
எனது ஆயுளின் நாட்களை தானடி
உரமாக்கிக் கொண்டு ,
வளர்ந்து நிற்கிறது காதல் ரோஜா..
அதிலும் முரணாய்
உனக்கு வாசம் வீசி
புன்னகையோடு பூத்துக் குலுங்க,
எனக்குள் குத்தும் முட்களில்
புலன்காகிதத்தோடு..
நீ, நான்,
என்னை வாசித்தாய்
உனது பொழுது போகும்
காலத்திற்கு மட்டும்...
நானோ உன்னை
படித்து வைத்தேனடி
வாழ்ந்து முடிக்கும்
காலத்திற்கும்...
உனது பொழுது போகும்
காலத்திற்கு மட்டும்...
நானோ உன்னை
படித்து வைத்தேனடி
வாழ்ந்து முடிக்கும்
காலத்திற்கும்...
Saturday, 11 June 2011
Thursday, 9 June 2011
Saturday, 4 June 2011
மெய் மறக்கிறது
இன்னிசை நிகழ்ச்சியில் லயித்து
உனது தொடை தட்டி தாளமிட,
எனது கள்ள விழிகளோ
நீ சுத்திக்கு ஏற்ப
அசைக்கும் தலையையும்
தட்டும் கரத்தின்
அழகியலின் இசையில்
மெய் மறக்கிறது...
உனது தொடை தட்டி தாளமிட,
எனது கள்ள விழிகளோ
நீ சுத்திக்கு ஏற்ப
அசைக்கும் தலையையும்
தட்டும் கரத்தின்
அழகியலின் இசையில்
மெய் மறக்கிறது...
விரலும் காதல் கொண்ட கதை
கைப்பிடி இறுக்கத்தில்
எனைக் காத்து
உனது நகக்கண்ணும்
எனைப் பார்த்துக்
அக்கறை கொள்ள...
இறுக்கத்தின் சூட்டிலே
என்னுயிர் கரைந்து
உன் ரேகையில் வழிந்து
உன்னுயிர் சேர...
தொடுவானம் தூரம்
கரம் பற்றி,
காதல் கதை பேசி,
கொஞ்சும் மொழியில்
கால் வலியும் நோக....
பட்டாம் பூச்சியின்
சிறகு கடன்வாங்கி
அதன் பார்வையில்
நாம் கடந்த பாதையினை
படம் பிடித்திட...
உன் விரல்களும்
என் விரல்களும்
மணற்பரப்பில்
சடுகுடு வீரர்களாய்
பின்னிக் கொள்ள...
என் நெற்றி வகிட்டில்
விரல்கள் பயணம் தொடங்கி
உதட்டு பள்ளத்தில்
தடுமாறி விழுந்து
உதட்டுப் பல்லில் கடி வாங்க...
உனது விரலும்
என்னிடம் புரிந்த காதலை
என்னுயிர் போகையிலும்
உடன் கொண்டு செல்ல
உன்னோடு விருப்பமா?
நானற்ற நீயும்
நீயற்ற நானும்
இலக்கண மில்லா தமிழாய்..
பிரிந்து இருத்தல் ஆகாது...
எனைக் காத்து
உனது நகக்கண்ணும்
எனைப் பார்த்துக்
அக்கறை கொள்ள...
இறுக்கத்தின் சூட்டிலே
என்னுயிர் கரைந்து
உன் ரேகையில் வழிந்து
உன்னுயிர் சேர...
தொடுவானம் தூரம்
கரம் பற்றி,
காதல் கதை பேசி,
கொஞ்சும் மொழியில்
கால் வலியும் நோக....
பட்டாம் பூச்சியின்
சிறகு கடன்வாங்கி
அதன் பார்வையில்
நாம் கடந்த பாதையினை
படம் பிடித்திட...
உன் விரல்களும்
என் விரல்களும்
மணற்பரப்பில்
சடுகுடு வீரர்களாய்
பின்னிக் கொள்ள...
என் நெற்றி வகிட்டில்
விரல்கள் பயணம் தொடங்கி
உதட்டு பள்ளத்தில்
தடுமாறி விழுந்து
உதட்டுப் பல்லில் கடி வாங்க...
உனது விரலும்
என்னிடம் புரிந்த காதலை
என்னுயிர் போகையிலும்
உடன் கொண்டு செல்ல
உன்னோடு விருப்பமா?
நானற்ற நீயும்
நீயற்ற நானும்
இலக்கண மில்லா தமிழாய்..
பிரிந்து இருத்தல் ஆகாது...
Thursday, 2 June 2011
மனம்
வெற்றி எனும் கானல் நீர் நிறைந்த
வாழ்க்கை பயணத்தில்,
தோல்விகளில் களைப்பாகிட,
அந்தக் கானல் நீரின் காட்சியிலே
என் தாகம் தீர்த்துக் கொள்ளும்
மனம் எனது...
வாழ்க்கை பயணத்தில்,
தோல்விகளில் களைப்பாகிட,
அந்தக் கானல் நீரின் காட்சியிலே
என் தாகம் தீர்த்துக் கொள்ளும்
மனம் எனது...
என் காதல்
முப்பொழுதும் உனது கற்பனையிலே
கழியும் என் நிமிடங்களை
நொடிப் பொழுதேனும்
எண்ணிப் பார்ப்பாயா பெண்ணே...
விடிந்தால் உன்னை காண
அடைந்தால் உன்னோடு
கனவில் வாழ என
மாற்றமே இல்லா அட்டவணையில்
சென்று கொண்டிருக்கிறதடி அன்பே
எனது வாழ்க்கை பயணம்...
எப்பொழுது நீ ஏறும்
நிறுத்தம் வருமென்ற
ஏக்கங்கள் பலவோடும்,
வாலிப வயதின் சஞ்சலம் தவிர்த்து
உனக்கென ஒரு
உன்னதக் காதலோடும்
காத்துக் கொண்டிருக்கிறேன்...
கழியும் என் நிமிடங்களை
நொடிப் பொழுதேனும்
எண்ணிப் பார்ப்பாயா பெண்ணே...
விடிந்தால் உன்னை காண
அடைந்தால் உன்னோடு
கனவில் வாழ என
மாற்றமே இல்லா அட்டவணையில்
சென்று கொண்டிருக்கிறதடி அன்பே
எனது வாழ்க்கை பயணம்...
எப்பொழுது நீ ஏறும்
நிறுத்தம் வருமென்ற
ஏக்கங்கள் பலவோடும்,
வாலிப வயதின் சஞ்சலம் தவிர்த்து
உனக்கென ஒரு
உன்னதக் காதலோடும்
காத்துக் கொண்டிருக்கிறேன்...
Thursday, 12 May 2011
அடைந்து கிடக்க
எனது சட்டை பொத்தானாய்
நீ உருமாறிட ஆசையடி...
என் இசைந்த விடுவிப்பு வரை
உனது காதலின் இறுக்கத்திலே
நான் அடைந்து கிடந்திட...
நீ உருமாறிட ஆசையடி...
என் இசைந்த விடுவிப்பு வரை
உனது காதலின் இறுக்கத்திலே
நான் அடைந்து கிடந்திட...
Wednesday, 11 May 2011
அழகு
நீ நீர் தெளித்து
கோலம் இட்டு எழுகையில்
அழகு நீ இட்ட
கோலமேன்பதா? - இல்லை
வியர்வை தெளித்து
கோலமாய் ஒட்டிக் கொண்ட
உனது நெற்றி முடிகள் என்பதா?
கோலம் இட்டு எழுகையில்
அழகு நீ இட்ட
கோலமேன்பதா? - இல்லை
வியர்வை தெளித்து
கோலமாய் ஒட்டிக் கொண்ட
உனது நெற்றி முடிகள் என்பதா?
Monday, 9 May 2011
விலை
முத்திரைப் பதித்த தாள் தான்
அதிக விலை என்றால்
பொழுதும் உன் இதழ் முத்திரை
வாங்கும் என் கன்னங்கள்
என்ன விலையாகும்...
அதிக விலை என்றால்
பொழுதும் உன் இதழ் முத்திரை
வாங்கும் என் கன்னங்கள்
என்ன விலையாகும்...
Monday, 2 May 2011
முத்தம்
இன்று எப்படியாவதுஉன்னிடம் வாங்கிவிட வேண்டுமென
எண்ணக் குளத்தில் கல்லெறிந்து,
கலைத்தாள் சைவமாய் மாறிட்டே...
அவளருகில் முகம் கொண்டு
பேசிடும் வேளையிலும்,
இதழருகில் கன்னம்
இட்டுச் செல்லும் நொடியிலும்,
முகவாய் தாடை வருடும் பொழுதும்,
உதடுகள் சுளிக்கும் நேரத்திலும்,
கண்டுகொள்ளாமல் இருக்கிறாள்
கல்லூலி மண்கனை எனக்கானவள்...
இனியும் முத்தத்திற்காய் தவமிருத்தல்
உத்தேசப்படா என்று
வேறு திசை திரும்ப எத்தனிக்கையில்,
கணத்தில் இதழ் பதித்தால்
திடீர் இன்பம் தந்து
திடுக்கிட்டு திக்குமுக்காட செய்தாள்...
சுகமான மகிழ்ச்சி என்றால்
எதிர்பார்த்த ஒன்று எதிர்பாரா நேரம்
கிடைப்பது தானேட என்று சொல்லி
மீண்டும் இதழ் பதித்து
எச்சில் முத்திரை பதிக்க ஆரம்பித்தாள்...
Subscribe to:
Posts (Atom)