முப்பொழுதும் உனது கற்பனையிலே
கழியும் என் நிமிடங்களை
நொடிப் பொழுதேனும்
எண்ணிப் பார்ப்பாயா பெண்ணே...
விடிந்தால் உன்னை காண
அடைந்தால் உன்னோடு
கனவில் வாழ என
மாற்றமே இல்லா அட்டவணையில்
சென்று கொண்டிருக்கிறதடி அன்பே
எனது வாழ்க்கை பயணம்...
எப்பொழுது நீ ஏறும்
நிறுத்தம் வருமென்ற
ஏக்கங்கள் பலவோடும்,
வாலிப வயதின் சஞ்சலம் தவிர்த்து
உனக்கென ஒரு
உன்னதக் காதலோடும்
காத்துக் கொண்டிருக்கிறேன்...
No comments:
Post a Comment