Sunday, 17 June 2012

இரவுகள் கவிழ்த்திய நினைவுகள்

இருள் போர்வைகள் போர்த்திய
என் இரவினில் மட்டும்
ஒளி அடித்துக் காட்டுகிறது
தனிமை தந்த நிலவு.

இலை விரித்ததும் வந்தமரும்

பெரும் பசி கொண்ட மனிதனாய்
வந்து அமர்கிறது
உனது எண்ணங்கள்
என் படுக்கை விரித்ததும்...

தீர்ப்பு சொல்ல வேண்டிய

காதலும் என் மீது சுமத்துகிறது
ஆயுள் முழுவதிற்குமான
இரவு தண்டனையினை...

அழும் குழந்தையின்

பசியினை தீர்க்கும் பாலினை
கவிழ்த்துக் கொட்டிய பூனையாய்
எனது இரவுகள் கவிழ்த்திய
உன் நினைவுகள்...

No comments:

Post a Comment