Saturday, 22 October 2011

தூரம்

எனது அணைப்பிற்கும்
இறுக்கத்திற்குமான தூரம்
உன் கண்களில் தானுள்ளது...

உயிரோடு காட்சிப் படுத்துகிறது

கடிதம் தாங்கி வந்த
கிறுக்கல்களும் ஓவியங்களும்
உயிரோடு காட்சிப் படுத்துகிறது
உனது உணர்ச்சியினை...

முத்தப் புள்ளி

எனக்கான
அவளது கடிதத்தின்
கடைசி வரிகள்
தீர்மானிக்கப்படுவது
முற்றுப்புள்ளியில் அல்ல
இதழின் முத்தப் புள்ளியில்...

இரு வரிக் கவிதை

என் இதழ்களுக்கு
அடிக்கடி படிக்கப் பிடிக்கும்
இரு வரிக்கவிதை
உன் இதழ்கள்...

தலை சாய்க்க தோள்

பாரம் சுமக்க
தின்னிய தோள்கள்
வளர்த்த எனக்கு,
முதன்முறையாய்
தோன்றியது
பூவையும் தாங்கிடும்
இலகு வேண்டுமென்று
உன் தலை சாய்தலில்...

படுக்கை

அமைதிக்கான
வெள்ளை நிறக் களத்தில்
இருவரும் வெற்றி பெற்றிடும்
வினோதப் போராட்ட கள்ம்
படுக்கை...

காதலின் அன்போடு

குழந்தைகள்
தெய்வத்தின் ஆசி கொண்டு
மண்ணில் பிறக்கின்றனவாம்.
இங்கோ எங்களின்
காதலின் அன்போடும்...

குழந்தை

ஈறுடலாய்
நீயும் நானும்,
ஓருடலாய்
ஓருயிராய் இங்கு
நம் குழந்தை...