Friday, 4 November 2011

அழகில் பொறாமை

சத்தியமாய் சொல்லடி.
எத்தனை தடவை
மாத்திருக்கிறாய்,
உன் அழகில்
பொறாமை கொண்டு
உடைந்த கண்ணாடியை..

இரண்டாம் கண்ணாடி

எனது அழகை
முழுமையாய் பார்க்கும்
இரண்டாம் கண்ணாடி.
நீ தானடா..

நீ

பொம்மைக்கும்
பிடித்த குழந்தையாய்
நீ..

தெரு பெண்கள்

பாவமடி
உன் தெரு பெண்கள்.
அனைத்து ஆண் பார்வையும்
தேடிடும் அழகியாய்
நீ இருக்கையில்..

உன்னில் மட்டும் தான்

மௌனங்களும்
உடல் அசைவுகளும்
கவிதையாகிப் போவது
உன்னில் மட்டும் தானடி...

பெயர்

கூப்பிடத் தான்
பெயர் வைத்துள்ளார்கள்
கண்மணியே உனக்கும்...
ஏனோ நேர் சொல்ல தைரியமற்று
நீ இல்லா
ஆள் அரவமற்ற இடத்தினுள்
உரக்க கத்திப் பார்க்கிறேன்...

நடிப்பு

எப்படியடி
உன்னால் மட்டும்
நடிக்க முடிகிறது
நட்பென்னும் போர்வையில்
காதலை மறைத்து...

Thursday, 3 November 2011

பாவம்

பிற உயிர்
வதைபடுவது பாவமாம்.
வேண்டாமடி உனக்கு
என் இதயம் படுத்தும் பாவம்.
போனால் போகட்டும்
வாழ்வளித்துவிடு
என் காதலுக்கு...

நடையோடு வார்த்தையும்

ஒரே மாதிரியான
சம்பவங்கள்
என் வாழ்வில் மட்டும்.
உன்னை நோக்கி சென்று
பார்வை கண்டு
அடங்கிப் போகும்
நடையோடு, வார்த்தையும்...

தவம்

யப்பப்பா
எவ்வளவு தவம் தான்
செய்ததோ
உந்தன் கைக்குட்டை...

இதயக் கருவறை.

ஈரைந்து மாதம்
சுமந்த கருவறைக்கடுத்து
அரை நூற்றாண்டு
உன்னைச் சுமக்க
காத்திருக்கிறது
என் இதயக் கருவறை.

எந்தன் கிறுக்கல்கள்...

நீ
படிக்கப்படும் வரையிலும்
கவிதையாகச் சித்தரிக்கப் படுகிறது
எந்தன் கிறுக்கல்கள்...
முடிக்கப்படா
பெரும் கவிதை தொகுப்பு
நீ..

புதையல்

காலம் கடந்து கிடைக்கும்
பொருட்கள் தாம்
புதையலாம்.
நீயும் புதையலைத் தான்
எதிர்ப் பார்க்கிறாயோ
காத்துக் கிடக்கும்
என் இதயத்தை...

நானொருவன் போதாதா..

ஏனடி இப்படி
குழந்தையையும் கெடுக்கிறாய்
முத்தம் கொடுத்து.
உன் முத்தத்திற்கு
ஏங்கிக் கிடக்கும்
நானொருவன் போதாதா..

குறுஞ்செய்தி வந்த பின்

மற்ற பகுதிகளை விட
உன் பகுதி தபால்காரன்
மிகப் பாவமடி.
கடிதங்கள் குறைந்து
குறுஞ்செய்தி வந்த பின்..

முதல் பார்வை

அதிகாலை பனியோடு
சில்லிட வைக்கிறது
அன்றைய நாளுக்கான
உந்தன் முதல் பார்வை.

வேண்டிடும் பழைய வாழ்க்கை...

இயந்திரதனமற்ற இயல்பு உலகம்.
நிலவொளியின் முற்றத்தின் உறக்கம்.
வாஞ்சனையான விசாரிப்புகள்.
பொய் வேசமிடாத புன்னகை.
அரட்டைகள் அரங்கேறும் திண்ணை.
மண் வாசனை துணைகொண்ட மழை.
தாத்தாவின் கண்டிப்பான பாசம்.
பாட்டியின் பாசக் கண்டிப்பு.
பொய்கூற வைக்கா அலைபேசி.
கணினி இல்லா சுதந்திர மனிதன்.
கூட்டுக் குடும்பத்தின் கூட்டாஞ்சோறு.
சுற்றம் அறிமுகம் கொண்ட தோழமை.
பிரதிபலன் பார்க்கா பங்காளிகள்.
பெரும் கதை கொண்ட ஒத்தையடிப் பாதை.
நினைவுகளை மெல்ல அசை போடும் மாட்டு வண்டிப் பயணம்.
அடுத்த ஊறும் மணக்கும் அம்மாவின் கை பக்குவம்.
உடலோடு உள்ளமும் பசியடங்கும் உபசரிப்பு.
உள்ளத்தில் வரும் வெளிப்படைப் பேச்சு.
வெள்ளந்தி மனிதர்களின் விசாரிப்பு கரிசனம்.
எழுத்துகள் தாங்கிய ஏக்க கடிதங்கள்.
ஊருக்கு பயந்த படபட காதல்.
இலை மறையான காமம்.
அலார கூச்சலற்ற சேவல் சத்தம்.
குளத்தங்கரை வேப்ப மரம்.
மனிதனை மனிதனாய் பார்த்த மனிதம்.

குறைப் பிரசவ வார்த்தை

பிரசவிக்க முடியா
வார்த்தையின் வலியோடு.
முனங்கிக் கொண்டிருக்கிறது
தொண்டைக்குழி...

எதிர்கொள்ளும்
அக்ரினையிடமும் கூறி
ஒத்திகைப் பார்க்கிறேன்
அதன் தலையாட்டல்களோடு...

உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும்
குறைப் பிரசவத்திலே
காதல் வார்த்தைகள்..

எப்படியும் ஒருநாளாவது
அறுவை சிகிச்சையில்
அறுத்தெறியும் முனைப்போடு
சுற்றிக் கொண்டிருக்கிறேன்...

நீ

சிற்பிகளும் கண்டிராத
அழகியல் அசைவுகள்
நீ...