Tuesday 3 January, 2012

என் நினைவு

திருமண விழாவொன்றில்
உன்னைப் பார்த்ததும்,
என் நினைவு வந்ததாய்
கூறினாள் என் தோழி...

உன்னைப் பார்த்ததும்
யார் யாருக்கோ
என் நினைவு வருகையில்,

உனக்கு வரவில்லையாடி
தினம் தினம்
உன் வீட்டுக் கண்ணாடியில்
உன் முகம் பார்க்கையில்...

1 comment:

  1. அருமையான கேள்வி
    மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete