Tuesday 22 November, 2011

உறக்கம் கலையும் வரை பயணம்

எங்கு செல்ல வேண்டுமென
கேட்ட நடத்துனரிடம்,
எனது தோளில் சாய்ந்து
துயில் கொள்ளும்
என்னவளின் உறக்கம்
கலையும் தூரம்
பயணச் சீட்டு கேட்டதற்கு
ஏனோ முறைக்கிறார்....

No comments:

Post a Comment