Saturday 22 October, 2011

காதலின் விசித்திர இரவுகள்.

படுக்கும் வரையில்
உறக்கம் கண் கட்டும்.

படுத்தால் ஏமாற்றி
பல் காட்டும்..

தலையணைக்கு
கை, கால் முளைத்து
அவள் உருமாறும்.

நினைவும் உருவம் கொண்டு
போர்வைக்குள் இறுக அணைக்கும்...

நாழிக்கொரு முறை
நகராத கடிகாரம் கண் பார்க்கும்...

மின்மினி ஒளி கண்டாலும்
விடிந்ததாய் எட்டிப் பார்க்கும்..

தொலைக்காட்சியின் அலைவரிசைகள்
நிலையின்றி நடை போடும்.

படுக்கையில் பயணிக்கும்
உடலும் தடம் புரளும்.

விரும்பிய நேரங்கள் உறக்கமற்று
விடியும் நேரம்
நிலவோடு கண் அயரும்

காதலின் விசித்திர இரவுகள்.

No comments:

Post a Comment