Friday 7 October, 2011

உயிரின் காலத்தை நீட்டித்துக் கொள்ள...


பொக்கை வாயின்
கறிதின்னும் ஆசையாய்
நிராசையாய் போனதடி
உன்னுடன் தொடர முடியா
என் காதல்...

பாதுகாக்க தவறி
புதைக்கப்பட்ட செல்வமாய்
சிலநேரம் இதயத்துடனே
புதைந்து போகிறது
ஒரு தலைக் காதலும்...

உரியவளுக்கு இன்றி
பொறுத்தவளுக்கு கிடைக்கும்
பெரும் புதையலாய்
நெஞ்சில் புதைந்த காதலும்
வருங்கால துணைவிக்கு...

சாட்சிகள் இருந்தும்
நிரூபிக்காத குற்றவாளியாய்
ஒரு தலைக் காதலும்..

கச்சேரியில் வெறுமையும்
வெறுமையில் கச்சேரியும்
அரங்கேரிடும் இந்த
அலைவரிசையில் மட்டும்...

ஊருக்கெல்லாம் சொல்லிய
உன் மீதான காதல்
உன்னிடம் எட்டும் திராணியற்று
பாதியிலே காற்றில் கரைகிறது...

அறுபது நொடி
வானவில்லின் சந்தோசத்திற்கு
வாழ்க்கையை ஈடாக்கிடும்
இந்தக் காதல்...

சொல்லிடாத காதல் என்னமோ
காட்சியில் மட்டுமே
நம்பிக்கை தந்து
மகிழ்ச்சி ஊட்டும்
கானல் நீராய்...

பார்த்து பார்த்து
உயிரின் காலத்தை
நீட்டித்துக் கொள்ள...

No comments:

Post a Comment