Friday 7 October, 2011

இழப்பது நொடிகள் மட்டுமல்ல


உன்னை ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியுமாய்
இழக்கிறேன்.
நினைத்தப்படியே தவிக்கிறேன்.
நம் வண்ணக் காதலில்
சாயமற்று பொலிவு இழக்கிறேன்...

கண்ணாடிக்குள் பொத்தி வைத்த
உந்தன் மதியழகை
துண்டுகளாய் சிதறடித்தேன்
மீட்டு வர இயலாத
பெரும் பொக்கிசத்தை...

உனது பிரிவில்
சாபம் கண்ட பாலையாய்
தீராத தாகம் கண்ட மனம்
மெல்ல தாகம் தணிக்கிறது
தினமும் கண்ணீர் கொண்டு..

மானம் மறைக்க என்று
அங்கங்கு உள்ள ஓட்டுகளோடு
உயிரெனும் சட்டையினை
அணிந்து திரிகிறேன்
மீதமுள்ள நாட்களை
என் சுற்றத்திற்காக...

சில நொடிகள் நிலை கொண்டாலே
மனம் உற்றுப் பார்வையில்
வெற்றுப் புள்ளியில்
மையம் கொள்கிறது...

நினைவுகளின்
காட்சி ஊட்டலில் மெல்ல
வளர்ந்து நிலைகொள்கிறது...

இப்படியே
வெறுமையான பார்வையிலேயே
இழப்பது நொடிகள் மட்டுமல்ல
உன் காதலையும் தான்...

No comments:

Post a Comment