இறந்து போன
காலம் எனத் தெரிந்தும்
உயிரூட்ட முயற்சிக்கும் மனம்...
காற்றில்
கரைந்து போன சொற்றொடரில்
புதிதாய் இணைய
துடிக்கும் வார்த்தை...
துளி விஷத்தோடு
சேர்ந்த பின் தன்
தன்மை எண்ணும் பாலாய்...
தன் கடைசி நொடிகளை கண்டு
வேறு இடம் தேடும்
மரக்கிளை இலைகள்...
உன்னோடு சேர்ந்த பின்
பிரித்தெடுக்க நினைக்கும்
எனது நினைவுகள்...
தவறி எழுதப்பட்ட பிழையாய்
உனது வருகை நோக்கி
தினமும் விடிந்து கொண்டிருக்கும்
வாழ்க்கை சூரியன்...
No comments:
Post a Comment