Monday 3 October, 2011

அழியாத கல்வெட்டாய்

அழியாத கல்வெட்டாய்
உந்தன் நினைவுகள்...

நீருடன் சேராது போன
எண்ணையாய் உன் காதல்...

மாற்றங்கள் யாவையும்
ஏற்றுக்கொள்ளும் மனம்
ஏனோ நீ இல்லா
வாழ்வை மட்டும்
ஏற்க மறுக்கிறது...

உன் அன்பின் நிழலிலே
நடை பழகிய
எந்தன் காதலுக்கு,
உன் துணையற்ற
வாழ்க்கையில் பயணிக்க
பொசுங்கிப் போனது பாதம்...

எத்தனையோ பொழுதுகளில்
மனம் உறுதி கொள்ளும்,
நீயற்ற வாழ்க்கையை
வாழ்வதென்று...

ஆனாலும் அருகாமையில்
காதல் ஜோடி பார்க்கையிலும்
நாம் பழகிய தருணங்களின்
தீராத நினைவுகளிலும்
சம்மட்டி கொண்டு
அடித்து நொறுக்கப்படுகிறது
எந்தன் வீராப்பு...

கண்களின் முறைப்பிற்கே
கதறிடும் குழந்தையிடம்,
பிரம்பு கொண்டு விலாச
தாங்காத அரற்றலிலே,
கழிகிறது எதிர்காலம்...

கூடவே என்னுயிரும்
கரைந்து கொண்டிருக்கிறது.
என் காதல் யாவும்
மொத்தமாய் வெளியேறிடும்
நேரத்திற்காய் காத்திருந்து...

No comments:

Post a Comment