Sunday 12 June, 2011

காதலில் நான்

என்னுள் நானே
எரிந்து உணர்கிறேன்
கண்ணீராய்...

மனமென்னும்
மெழுகுவர்த்தியில்
காதல் திரி,
ஏற்றப்படுகையில் மட்டும்,
சந்தோஷ வெளிச்சம் மறைந்து
இருள் சூழ்கிறது...

தனிமைப் பொழுதுகளில்
மிகச் சரியாய்
போகும் மினசாரமாய்,
தொலைந்து போய்கிறது
என்னிலையும்
சூழ்நிலையில் கருகும்
மகிழ்ச்சிகளையும்...

பசி பிய்த்து தின்ற
உடலில் இன்று
அகிம்சாவாதியாய் உருமாற்றம்...

முன் ஜாமினற்ற
பிடி வாரன்ட்டில்
தானாய் சரணடைந்த
ஆயுள் கைதியாய்....

No comments:

Post a Comment