Monday 27 June, 2011

என் காதலின் அருமையான நிமிடங்கள்...

என் காதலின்
அருமையான நிமிடங்கள்...
எனது கரம் பிடித்தும்
உயிராய் நீ துடித்தும்,
உள்ளங்கை நடுவிலே
கோலமிட்டு காதல் சொல்கையில்,

எனது தோள் சாய்த்தும்
உன் மடியினில் தலை வைத்தும்,
என்னில் பலமாய் காதலை
வேரூன்றி இறக்கியதும்,

விரல்களின் சொடுக்கிற்கு ஈடாய்
உனது தலை அசைவுகளும்
கடுகளவும் கண்ணை விட்டு அகலாது...

காதோரம் படர்ந்த முடியினில்
என் விரல்கள் பயணிக்க,
பதிலுக்கு என் தலை கோத,
எனது சட்டை பொத்தானில்
விரல்களின் விளையாட்டும்,
தாவணி ஓரத்தின்
என் விரல் சுற்றுகளும்,

விரல், கரம், கன்னம் என
முத்தப் பயணம் தொடங்கி,
முத்தத்தின் பிறப்பிடமாய்
இதழ்களில் முடிய...

பிரியப் போகும் நேரத்தினை
முட்கள் ஆயுதமாய் மிரட்டிட,
மயக்கும் மோகினி சூடிய மலரா
அல்லது சூடிக்கொண்ட கூந்தலா
என்னும் குழப்பத்திலே,

அந்நொடி நடந்தவை எல்லாம்
உடனுக்குடன் இதயம்
நகலெடுத்துக் கொள்கிறது
நீயில்லாத் தனிமையில்
என்னை மிரட்டிட...

No comments:

Post a Comment