Saturday 4 June, 2011

விரலும் காதல் கொண்ட கதை

கைப்பிடி இறுக்கத்தில்
எனைக் காத்து
உனது நகக்கண்ணும்
எனைப் பார்த்துக்
அக்கறை கொள்ள...

இறுக்கத்தின் சூட்டிலே
என்னுயிர் கரைந்து
உன் ரேகையில் வழிந்து
உன்னுயிர் சேர...

தொடுவானம் தூரம்
கரம் பற்றி,
காதல் கதை பேசி,
கொஞ்சும் மொழியில்
கால் வலியும் நோக....

பட்டாம் பூச்சியின்
சிறகு கடன்வாங்கி
அதன் பார்வையில்
நாம் கடந்த பாதையினை
படம் பிடித்திட...

உன் விரல்களும்
என் விரல்களும்
மணற்பரப்பில்
சடுகுடு வீரர்களாய்
பின்னிக் கொள்ள...

என் நெற்றி வகிட்டில்
விரல்கள் பயணம் தொடங்கி
உதட்டு பள்ளத்தில்
தடுமாறி விழுந்து
உதட்டுப் பல்லில் கடி வாங்க...

உனது விரலும்
என்னிடம் புரிந்த காதலை
என்னுயிர் போகையிலும்
உடன் கொண்டு செல்ல
உன்னோடு விருப்பமா?

நானற்ற நீயும்
நீயற்ற நானும்
இலக்கண மில்லா தமிழாய்..
பிரிந்து இருத்தல் ஆகாது...

1 comment: