Wednesday 5 January, 2011

நாய்க்குட்டி

நானொரு நாய்க்குட்டி தானடி..
உனக்கு பிடித்த நாய்க்குட்டி.
உன் ஓரப்பார்வை கொஞ்சமாய்
பிய்த்து போட்டதர்க்காய்
ஓய்வில்லாமல் உன்பின்னே
சுற்றித் திரியும் நாய்க்குட்டி...

உன் எண்ணங்களை
மோப்பம் பிடித்துக் கொண்டு,
சென்றுவந்த இடமெல்லாம்
அலைந்து திரிந்து
ஏமாற்றத்தை இரையாய் கொண்டு
உலவிடும் நாய்க்குட்டி...

கொஞ்சல் மொழிக்கும்
அன்பு அணைப்பிற்குமாய்,
துள்ளல் நடை போட்டு
ஓடி வந்திடும் நாய்க்குட்டி...

உன் தலை கோதளுக்கும்
காதுமடல் திருகளுக்கும்
கண்கள் சொருகியபடி உன்னிடம்
தலை காட்டிடும் நாய்க்குட்டி...

உன் உருவம் தராமல்
பிரிவில் பட்டினி போட்டாலும்
இன்ப நிஜங்களை இரையாக்கி
உன்னைக் கண்டதும்
கட்டியணைக்கும் பாச நாய்க்குட்டி...

உன் வார்த்தையாகும் சங்கிலிக்குள்
என வாழ்க்கையை இட்டு
கட்டுப்பட்ட நாய்க்குட்டி

உன் குடும்பத்தால்
தூக்கி வீசப்பட்டாலும்
சகோதரனால் விரட்டப்பட்டாலும்
உன் பாசத்திற்காய்
பொறுமை காத்து நிற்கிறேன்
இன்றும் உனக்கு பிடித்த
அதே நாய்க்குட்டியாய்...

No comments:

Post a Comment