ஒவ்வொரு முறை
நீ பெறும் லஞ்சத்தில்
காந்தியும் சிரிக்கிறார்
எனது மக்களின் கண்ணீரில்...
சேர்ப்பது பணத்தை அல்ல
மனங்களின் சாபங்களையும் தான்..
வாங்கும் ஊதியத்திற்கு மேலும்
ஆசைப்படும் உனக்கும்
ரத்தம் உறிஞ்சும் அட்டைக்கும்
ஏது வித்தியாசம்...
உன் மனைவியின்
நிழலுக்கும் சேர்த்தே
வரதட்சணை கேட்பவன்,
உனது பிள்ளைகளின்
இனிஷியலுக்கும்
லஞ்சம் கேட்கும் அளவிற்கு
நீ மாறிட்டாலும்
வியப்பதற்கு ஏதுமில்லை...
No comments:
Post a Comment