Saturday 25 December, 2010

ஏமாற்றம்

கோடைகால வெப்பத்தில்
மலர்கள் யாவும் வாடிட
தேனெடுக்க வழியின்றி
ஆயாசமாய்த் திரிகையில்,
பெரியதொரு தேன்கிண்ண மலரென
உன் இதழ்களை மொய்த்திட
எண்ணி அருகில் வருகையில்,
உன் இதழ்களை
நான் சுவைப்பதைப் பார்த்து
ஏமாந்து தான் போகிறது தேனீக்களும்...

No comments:

Post a Comment