உன் கூரிய பார்வை உளியால்
உருவமில்லா கல்லான என்னை
சிலைஎனச் செதுக்கினாய்...
உன் காதல் கை கூடிருந்தால்
முழுச் சிலையாய் உருபெற்றுருப்பேன்...
கிடைக்கப் பெறா நிலையில்,
சேதமடைந்த சிலையாய்,
கோவில் சேரா சிற்பமாய்,
உன் நினைவு அம்மிக் கல்லில்
அரைபடும் பொருளாய்
என்னிதையம் சிக்கிடுதே....
No comments:
Post a Comment