Saturday 25 December, 2010

வண்ணத்துப்பூச்சி

நான் செல்லும் வழியெங்கும்
ஒரு வண்ணத்துப் பூச்சியினையும்
காணவில்லையென அப்பாவியாய்
கேட்கிறாய் எல்லாம் செய்துவிட்டு...
உன்னிமைகள் படபடப்பைக் கண்டு
நீ பூப்படைந்த நாள்முதலே
இனியும் இங்கிருத்தல்
அழகில்லையென நாணி
நீ உலவும் இடம்விடுத்து
இடம் பெயர்ந்து விட்டதே...

No comments:

Post a Comment