Friday 17 December, 2010

நன்றி காதலா

என் மடியில் படுத்துக் கொண்டு
என் விரல்களில் சொடுக்கியபடியே
நன்றி சொன்னாள் என்னவள்...
ஏனென்று வினவிக் கேட்கையில்
என் மடியில் நீ படுத்துறங்கும் போது
உன் தலை கோதி, கன்னம் வருடி
நீ தூங்கும் அழகை இரசித்திடும்
ஒரு தாயின் நிலையை
தொட்டடைந்தேன்
காதலா...
தனிமையில் உன் மடியினில்
நானும் தலை சாய்த்திடுகையில்
காதலனின் கதகதப்பும்,
அன்பின் அரவணைப்புமாய்
ஒரு சேரக் கண்டேன் காதலியாய்...
நெஞ்சில் சுமந்த காதலுக்கும்
மனதில் சுமந்த மழலைக்கும்
உண்டான சுகத்தினை தந்தமைக்கு
தானென்று முத்தமிட்டாள்
கண்ணடித்தபடி...

No comments:

Post a Comment