Saturday 9 October, 2010

ஏனடி தொலைத்தாய்

அடிதடி வாழ்விலிருந்த என்னை
அடிக்கடி அன்பில் அனைத்து
அடியோடு மாறிடச் செய்தாய்...

முரடனாய், முட்களாய் இருந்த என்னை
மலர் மோதி மயக்கம் கொள்ளச் செய்யும்
மனமுள்ளவனாய் மாற்றி அமைத்தாய்...

கல்வியறியா தற்குறியான என்னை
நம் வாழ்க்கையை படித்துக் காட்டி
தங்கப்பதக்கம் வாங்க வைத்தாய்..

கத்தி எடுத்தவன் கையில்
கணினியை தந்து - இன்று
என்னிடம் கற்றவர் யாவரும்
பாராட்டும் பெயரைத் தந்தாய்...

என் திறமையை தீட்டி
நம் காதலை உரமாக்கி
தொழிலை தொடங்கச் செய்து
ஒரு மதி நிலைக்கு உயர்த்தினாய்...

வாழ்க்கை தந்தாய்...
பெயரைத் தந்தாய்...
மரியாதை கொணர்ந்தாய்..
கல்வியை புகட்டினாய்...
தொழிலைத் தொடங்க வைத்தாய்
உயர்ந்தவன் ஆக்கினாய்...
முத
ல்வனாய் மாற்றினாய்...

எல்லாம் தந்துவிட்டு
நம் காதலை பறித்து
உன் வாழ்க்கையை தொடங்கி
என் வாழ்க்கையை தொலைத்துவிட்டயடி...

2 comments:

  1. unga life fulla ah sollitinga pola...great ......

    ReplyDelete
  2. Athu inum irukunga.
    Full of Joy ful only.
    On theriyumanga. nanga love pana 7 yrs'a sandaiye potathilla.
    Class'la elarukum avlo pidikkum enagala

    ReplyDelete