Thursday 7 October, 2010

உன் காதல்


எழுதப்படா கவிதை - உன் பெயர்
கேட்டிடாத இசை - உன் சுவாசம்
வண்டில்லா மலர் - உன் இதழ்கள்
சங்கமித்திடா நதிகள் - உன் கை ரேகை
தாயின் தாலாட்டு - உன் புன்னகை
தேயாத நிலவு - உன் முகம்
சொல்லப்படா இலக்கணம் - உன் நடை
பறிக்காத மயிலிறகு - உன் கன்னம்
இயற்றப்படா அகராதி - உன் பார்வை
உயிரில்லா அழகு - உன் நிழல்
கிடைக்கப்பெறா வரம் - உன் காதல்....

2 comments:

  1. உங்கள் கவிதை எங்கள் கண்களுக்கு விருந்து படைக்கிறது, அனைத்தும் அருமை, உங்கள் கவிதை மேலும் வளர ஏன் வாழ்த்துக்கள்

    ReplyDelete