Thursday 7 October, 2010

வழிமுறை

காதலியே
என் தோளில் சாய்ந்து
நீ அமர்கையில்,
உன் கண்களின் படபடப்பு,
சன்னமான இதயத்தின் துடிப்பு,
சுவாசக் காற்றின் வெப்பம்,
காற்றில் துரத்தி
என் முகத்தில் மணம் பரப்பும்
கூந்தல் முடி.
உள்ளங்கைகளின் இறுக்கத்தின் சூடு,
கன்னத்தின் ஸ்பரிசம் என
உன் காதலைச் சொல்லிடும்
விந்தையான வழிமுறைதான் என்னடி

1 comment: