Tuesday 12 October, 2010

சொல்லிவிட்டன அன்பே

கள்ளத்தன பார்வைகளும்,
கண்களில் குறுகுறுக்கும் புன்னகையும்,
வந்துவிட்டதை தெரிவித்திடும் வளயலோசையும்,
கவனிப்புகளைக் காட்டிடும் செருமல்களும்,
ஜீவன் தெரியா நேரத் தேடல்களும்,
நோய்வாய்ப்பட்ட நாட்களின் விசாரணைகளும்,
நாட்கணக்கில் முகம்காணா தவிப்புகளும்,
என்னெதிரே பேசப்படும் படபட வார்த்தைகளும்,
நீ சொல்லிடும் முன்னரே
சொல்லிவிட்டன அன்பே என்னிடம்
உன் காதலை...

3 comments: