Thursday 7 October, 2010

இடம் வேண்டும்

பேசும் வார்த்தை யாவும்
உன் பெயரை எதிரொலிக்க...
நீ வரும் பாதையெங்கும்
என் கண்கள் பூ பூக்க...
என்றும் அன்பே நீ சிரித்தால்
எந்தன் மனமும் சிறகடிக்க...
பாவி என் இதயம் துடிக்கிறதே
என் அன்பே உன்னைக் காணாமலே.
அலைகள் வந்து சேர்ந்தாலும்
கரை தான் அதனை ஏற்காதோ?
என் காதல் வருகையிலே
நீ மட்டும் மறுப்பதேனோ
என்று உன்னைப் பார்த்தேனோ
அன்றே என் உயிர் துறந்தேன்...
உடல் தன் உலவுகிறதே தவிர
உயிர் உள்ளதே உன்னிடமே...
உயிரை எனக்குத் தருவதென்றால்
உயிரை வைக்க இடம் வேண்டும்
உன் மனதில்...

1 comment: