Saturday 9 October, 2010

க வரிசையில் என் காதல்

காதல் வலிகள் எல்லாம்
கண்கள்
ழியாக கண்ணீராய்
காகிதத்தில் தீட்டி
கடும்தீயில் பொசுக்கிட சொன்னார்கள்...

காகிதமாய் லேசான மனதிருந்தால்
கருகிய சாம்பலாய்,
காற்றோடு கலந்திருக்கும் - இங்கோ
காதல் வ
லியிலே
கடும்தீயில் சுடுபட்டு
கல்லாகிப் போன பின்
காற்றும் தான் நகர்த்திடுமோ?
கடும்தீயும் எரித்திடுமோ?

காத்திருந்தும் பயனில்லை
கரையாத நொடிகளைப் பார்த்தபடியே
கண்மணியின் கள்ளச் சிரிப்பிலும்
கண்ணீரின் உப்புச் சுவையோடும்...

கனவோடு வாழ்வதாயின்
கலையாத உன் நினைவோடும்,
கல்லறையில் வீழ்வதாயின்
கண்ணே நம் காதலோடும்...

1 comment: